Thursday, December 23, 2010

பிஞ்சு மனதும் நஞ்சு உள்ளமும்...

இது சீரியசான உண்மையுங்க... நடந்தது...... (கொஞ்சம் சீரியஸ்.....)

சேஷிகன்.. அவனது பிஞ்சு உள்ளமும் எழில் கொஞ்சும் வதனமும்... சுட்டிக்குறும்பும்... அவனது அடையாளங்கள்.அவன் 5ம் ஆண்டு வகுப்பு படிக்கும் மாணவன்,கெட்டிக்காரனும் கூட (கதையின் கதாநாயகன் ஆச்சே...) அவனுக்கு டீ.வீ பார்ப்பது என்றால் ரொம்பப்பிடிக்கும்....

ஒரு நாள் அவன் பாடசாலை விட்டு வீடு திரும்பிய  அவன் வழமை போல் இல்லை முகங்கள் சிவந்து வீங்கி இருந்தது....  ததும்பிய கண்ணீர், கண்விழிம்பில் நின்று நிலத்தினை பார்த்து பயந்த வண்ணம் நடுங்கி கொண்டு இருந்தது.....  அவன் மூக்கினில் காற்று செல்ல தடுமாறியது..... அவனது அம்மா அவனை கண்டது.. மிரண்டு போனார்..  என்னடா நடந்தது.. ????

யாரோடையும் சண்டை போட்டியா ???      ”இல்லம்மா” அவன் பதில்..

ஏதாவது குழப்படி செய்தியா ???                     ”நான் செய்றல்லம்மா...”

அப்ப என்னதான் பண்ணி தொலச்சா ???   நான் ஒன்டும் செய்யல ஆனா டீச்சர் என்ன போட்டு அடிச்சுட்டா...

அடுத்த நாள் அம்மா அவனையும் கூட்டிட்டு டீச்சர்ட்ட போய்ட்டா.....
“என்ன டீச்சர் நடந்துச்சு”.... அவன்ட அம்மா...
என்னங்க உங்க மகன் வயதுக்கு ஏற்ற மாதிரியா கதைக்குறான்.. என்ன நடந்த என்டு அவன்ட வாயாலயே கேளுங்க....

என்னடா நடந்துச்சு .???





  என்ட பிரண்டு காயத்திரியை பாத்து  “I LOVE GAAJATHIRI ” என்டு தான் சொன்னான்..

பாத்திங்களா ??? உங்க பிள்ளைய....


ஏன்டா அப்பிடி சொன்னா ???       அவங்க அம்மா!!!

ஏன் அம்மா எனக்கு காயத்திரிய ரொம்ப பிடிக்கும்.... T.V la  எல்லாம்  I love my Mummy ..... I love My Daddy ...I love Apple Jam  .... என்டு எல்லாம் தங்களுக்கு பிடிச்சத பாத்து  சொல்றாங்க.....   அதான் நானும் காயத்திரிய பாத்து சொன்னன்...  Love  என்டா அப்பிடி என்ன கெட்ட வார்த்தையா ???

ஒரு கனம் அவன் கண்களில் இருந்த கண்ணீர் துளி ..Teacher இன் கண்ணிற்கு இடமாறியது.....
அப்போதுதான் புரிந்தது.. பிள்ளைகள் பிஞ்சு நெஞ்சு உடையவர்கள் மட்டும் இல்ல.. நஞ்சில்லா  மனமும் உடையர்கள் என்டு.....

“வாறியா சேஷிகன் விளையாடுவம்”   தூரத்தே காயத்திரியின் குரல்... புன்சிரிப்புடன்..  அவன் துள்ளிச்சென்றான்.....

Saturday, October 16, 2010

மறைக்கவும் , மறுக்கவும் முடியா உண்மைகள்...

நாசாமா போச்சு.. இவன் வர வர தத்துவம் வேற எழுதத்தொடங்கிட்டான் என்டு நீங்க எதிர்பார்த்தா அது தப்பு... ஆனா கிட்டத்தட்ட தத்துவம் மாதிரி.. ஆனா தத்துவம் இல்ல.. ஆனா உண்மைகள்... பலருக்கும் தெரிந்த ஆனா வெளியே சொல்ல ஏலாத யதார்த்தங்கள்.

 சரிடாப்பா.. வதைக்கிற என்டு முடிவு கட்டிட்டா.. இல்லாட்டி உங்கள பாணில சொன்ன மொக்கை போடப்போற என்டு தெரிஞ்சு போச்சு வேணா...........ம் என்டா மட்டும் விடவா போறா.. போட்டுட்டு போ என்டு சொல்ற உங்க Mind Voice ஐ நான் catch  பண்ணிட்டன்..






சரி நான் தொடங்கவா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!




நாங்க சின்னப்பிள்ளையா இருந்து வளந்து . பள்ளிக்கூடம் போய் படிச்சு.. இப்ப கம்பஸ் வரை வந்துட்டம்... இப்பிடியான எங்கட கேவலம் கெட்ட பாதையில் பல நாறின அனுபவங்கள்...(என்னடா பாதையே கேவலம் அதுக்குள்ளேயே நாறனதா .. என்டு பாக்கிறீங்களா ) இல்லாட்டி நாங்க நாற வச்ச அனுபவங்கள்...ஒன்டு இரண்டான டேஸ்டான அனுபவங்கள்.. பல கெட்டது.. அதுல சில எங்களுக்கு சுட்டது என்டு வெரைட்டி வெரைட்டியா எக்ஸ்பீரயன்ஸ் இருக்கும்..  இந்த மொத்த எக்ஸ்பீரயன்ஸ்லயே... அன்டில் (Untill) ஏ/எல் வரை நாங்க பட்டது குறைவாத்தான் இருக்கும் ஏன் என்டா....  We  were UNDER CONTROL அதாவது நாங்க எங்கட அம்மா அப்பா பிள்ளையா இருந்தனாங்க.. அதுக்காக இப்ப என்ன ஆடு மாடுகள்ட பிள்ளையா என்டெல்லாம் என்ன நக்கல் அடிக்கப்படாது.. ஓ.கே.  கம்பசுக்க வந்த பிறகு தான் பேத்த கன்டு குட்டிய அவிட்டு விட்ட கணக்கா அங்க இங்க என்டு என்ன செய்ற என்டு தெரியாம ஓடிதிரிச்சு.. நாங்க அடி வேண்டாத இடமே இல்ல,                              ( இங்கு அடி = எக்ஸ்பீரியன்ஸ்) இப்பதான் நாங்க எங்கட அந்த நாறின பாதைல உண்மைகளை அறிய வெளிக்கிடுறம்..............


இப்ப நான் சொல்லப்போறது யாரையும் புண்படுத்தவோ .. இல்ல யாரையோ குத்திக்காட்டவோ இல்லை என்டு சொன்னா நீங்க நம்மபோறது இல்ல.... ஏன் என்டா அந்த உண்மைகள் பலருக்கு குத்தும்... சிலருக்கு பத்தும்... அதால எவன் எவனுக்கு இல்லாட்டி எவள் எவளுக்கு குத்துதோ அவங்க திருந்த ட்ரை பண்ணுங்க (சொன்னான் தானே தத்துவம் மாதிரி ஆனா தத்துவம் இல்ல என்டு அதாங்க இது...)

முதலாவது என்ன என்டா மறைக்கிறது.. சாப்பாடு சாமான இல்லடாப்பா.... உண்மைகளை... சரி சில விஷயங்கள மறைக்கத்தான் வேண்டும்.. ஆனா அது ரகசியமா இருக்க மட்டும்தான்... ஊருக்கே பப்பரப்பே என்டு வெளிச்ச விஷயங்ள....  இவங்கள் என்னென்டா.. அவங்களுக்கே தெரியும் இது ஊருக்கே தெரியும் என்டு ஆனா ஏதோ பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிச்சா உலகமே இருட்டு என்ட மாதிரி.. இவங்க விஷயத்த அமத்தி வச்சா ஒத்தருக்கும் தெரியா என்டு நினைக்கிறது...

இன்னும் சில பேர் இருக்காங்க ஊருக்ககு நல்லவங்களா இருக்கிறது.. அதான்பா... தாங்க மட்டவங்கள பத்தி எவ்வளவு உண்மையா தெரிஞ்சு வச்சுருக்காங்க இல்ல புரிஞ்சிருக்காங்க என்டு அவங்களுக்கு முக்கியம் இல்ல.. தங்கள பத்தி ஊர் என்ன நினைக்குது என்டுதான் முக்கியம்.. அதுக்கு எங்கட கம்பசுலயே பலர்... சீ... சீ... சிலர் இருக்காங்க... அவங்கட ரோதனை தாங்க முடியாதுப்பா... ஏதாவது ஒன்டு சொன்னா காணும் அதையே வச்சு குடைறது....  " நீங்க என்ன பத்தி என்ன நினைக்கிறீங்க ???? என்ன பத்தி ஏதாவது சொல்லுங்க.... நான் நல்லனா/ளா ,கெட்டவனா/ளா ?? "  அதுக்கு ஏதாவது சொல்லனும் இல்லாட்டி அன்டைய நாள் அம்போ..கூகூகூகூகூகூகூகூ தான்...   சப்பப்பா முடில.!!! ஓ.. ஆனா எனக்கு ஒன்டு மட்டும் என்டு விளங்கல்லப்பா !! முதல்ல தன்னை பத்தியே தெரியாமலே வாழ்ற ஜென்மங்கள என்ன என்டு சொல்றது.... (இது நான் யாரையும் குத்தல என்டா யாராவது நம்புவாங்களா ???)  வேணும் என்டா பாருங்களேன். இத வாசிச்சுட்டு உடனே கேப்பாங்க. இது யாரைபத்தி எழுதினீங்க... யாரை இப்படி சொன்னீங்க என்டு.... அப்பிடி எண்ணம் உங்களுக்கு வந்துச்சு.. இது உங்களுக்குரியதே !!!!!


அடுத்து..... உண்மையா இது ஒரு கேவலம் கெட்ட வேலைங்க....
X , Y  என்டு இரண்டு பேர் என்டு வைங்களேன் X க்கு Y ஐ ஏதோ காரணத்துக்காக பிடிக்கல என்டுங்களேன்.... பிடிக்காட்டி விடுறதானே..... .. அவன்(Y) ஏதோ வஞ்சம் வச்சு பழிவாங்கிற மாதிரியே அவங்கட நடவடிக்கைக்ள இருக்கும்...  உதாரணத்துக்க வருவோமே... (இது வெறும் உதாரணம் தாங்க.. உண்மையா நடக்கல :P ) சிலருக்கு(Y) லெக்சர் நேரத்தோடயே முடியும்... ஆனா..  அவன் வீட்ட போக மாட்டான் X க்கு அலுப்படிக்க என்டே காத்திருப்பாங்கள்.. அதுள என்ன ஒரு காமடி என்டா X க்கு பெரிய சந்தோசம் தன்னையும் ஒருவன் பாக்கிறன் என்டு.... தூ இதெல்லாம் ஒரு பிழைப்பு (இந்த தூ Y க்குங்க . X கடுப்பாக வேண்டாம்)..... கடுப்பாக்கிறார் மை லார்ட் (இது எனக்கு




அடுத்ததுதாங்க வாழ்கையில மெயின் மெட்டர்.... லவ்... இத வாசிச்ச பிறது என்னை யாரும் ஒரு கேள்வியும் கேக்கபடாது.... நாங்க என்ன யாரையும் லவ் பண்ண வேணாம் என்டா சொல்றம்.. லவ் பண்றது சந்தோசம் தானே.. லவ் பண்றத வெளில சொன்ன ஒரு பிரச்சனையும் இல்லங்க... என்னென்டு கேக்குறீங்களா...
1- அவன்ட ஆளை இல்லாட்டி அவள்ட ஆள(அவள்ட ஆள் என்டது கொஞ்சம் ஓவர் தான் பருவால அஜட்ஸ் பண்ணுங்க) யாரும் பாக்க (லவ்) மாட்டாங்க.
2-எனி டைம் எனி கெட்ப் பண்ணுவாங்க Eg :- யாரும் அடிக்க வந்தா .. மாறி அடிக்காட்டியும் சேந்து அடிவாங்கவோ.. இல்லாட்டி கூட்டிட்டு ஓடி வரவோ உதவலாம் (Not sure.. may be)....
3- Etc....




சிலர்... அவன் லவ் பண்றானோ இல்லயோ... மட்டவன லவ் பண்ண வச்சு அவன பாழும் குழில தள்ளினாலும் பருவால....  புதை குழில தள்ளுறதுக்கு என்டே சில ஜென்மம் கம்பசுக்கு வந்திருக்கு.. மட்டவனுக் சும்மா .. சும்மா உசுப்பேத்தற... சும்மா கிளப்பி விட்டு வேடிக்க பாக்கிறதுல இருக்கிற சுகம் இருக்கே.... அது பரம சுகமுங்க (ஐயையோ தெரியாம வாயை விட்டுடனே) ..

அடுத்தது படிப்பு.. இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்டு பாக்கிறீங்களா.... படிக்கிறவன் மட்டுதான் படிப்ப பத்தி எழுதனும் இல்ல படிப்பால பாதிக்கப்பட்டவனும் எழுதலாம் என்டு காட்டத்தான் .. வான்டறா நான் இத எழுதுறன்.... ஒரு சில கேசுகள் கிடக்கு .... அவங்கள் படிப்பாங்கள்... ஆனா எக்ஸாம் எழுதிட்டு வந்து... போடா மச்சான்..... இந்த முறை பாடம் கைலதான்.. C வரும் என்டதே சந்தேகம் தான். என்டு வாங்கள்.. ஆனா எடுக்கிறது A or A+  .. சரி விடு கழுதை எடுத்துட்டு அவன்ட பாட்டுல போறதுதானே விடமாட்டானே.. .. அங்கதாங்க .. அவன் மட்டவன சீண்டி பாப்பான்... மச்சான் எப்புடி வந்ததென்டே தெரியாடா.. லெக்சர் மாறி போட்டுடான் மச்சி.....   இல்லாட்டி Moderate பண்ணிருக்கான் மச்சி.... ... இதுல நானே பாதிக்கப்பட்டேன் .. நேரடியாக பாதிக்கப்பட்டேன்... இவங்கள பத்தி யாரும் முதல்லே தெரிஞ்சா மட்டவங்கள அலர்ட் ஆக்குங்க... நேரத்தோடயே சுதாகரிச்சு தப்பலாம்.....

முடிவா நான் சொல்ல வாறது என்னனென்... இதுல நீங்க எந்த எந்த இடத்துல இருக்கீங்களோ .... திருந்துங்க என்டா .. .நீங்க திருந்த போறது இல்ல..... ஆகவே....  ட்ரையாவது பண்ணுங்க.... திருந்திறதுக்கு....

எவனாவது இத வாசிச்சுட்டு வந்து ஏதாவது கேள்வி கேளுக்க...  அவன பத்தியும்(கேவலமா !!!) எழுதிப்போடுவன்.... ஜாக்கிரதை...

இன்டைக்கு இந்த அறுவை போதும் நான் நெக்ஸ்ட் மீட்ட பண்ணுறன்..

Friday, August 6, 2010

வாளி

என்னடா இவன்... திடீர் என்டு வாளி , கயிறு, கிணறு என்டு கதைக்கப்போறன் என்டு பாக்கிறீங்களா ????  அதெல்லாம் ஒன்னுமில்ல.... நம்மட கம்பசுல வாளி வைக்கிறது எவ்வளவு ரீச் ஆகி இருக்கி.... நம்மட யூனியர்ஸ அது எவ்வளவு பாதிச்சு இருக்கு... என்டு அறிய அவர்களின் அறிக்கைகளை தெரிந்து கொள்ள முயற்சி செய்த போது.. பல விசித்திரமான் பதில்கள்.... வினோதமான் எண்ணங்கள் எழுந்தன......

இதோ அவர்களின எண்ணங்கள் சிறிதும் மாற்றம் இன்றி... ஒவ்வொருவரதும்  எண்ணங்கள்......

கனிஷ்ட மாணவர்கள் இது பற்றி தெரிவிக்கையில்

இன்றய 21 ம் நூற்றாண்டின் இயந்திரமயமான வாழ்க்கையில் “வாளி வைத்தல்” என்பது நம் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்த ஒன்றாகி விட்டது. எங்கு பார்த்தாலும் வாளி வைத்தல் வாளி் வைத்தல் என்று சொன்னால் அது மிகையாகாது. வாளி வைத்தல் எனும் வார்த்தை சற்றே பிரபல்யமாகாது இருப்பினும் அதனைக கைக்கொள்ளாதவர் அநேகமாக நம்மில் யாருமில்லை. சரி ! இனி வாளி வைத்தல் என்றால் என்ன ??

    யாதேனும் ஒருவர் தமது காரியம் நிறைவேறும் பொருட்டு இன்னொருவருக்கு இல்லாத தகைமைகளைக் கூறி, பல உதவிகள் புரிந்து , வெகுமதிகள் அளித்து அவருடன் நட்பாக இருத்தல் அல்லது நட்பாக இருப்பது போல் நடித்தல் வாளி வைத்தல் எனப்படும். அப்படி இந்த வாளி வைப்பதனால் ஏற்படும் நன்மைகள் யாவை ??

எண்ணில் அடங்காதவை.. வீட்டிலும் . பாடசாலையிலும் , பல்கலைக்கழகத்திலும், வீதியிலும் , கடையிலும், வியாபாரத்திலும், அரசியலிலும் வாளி வைத்தல் அளப்பெரிய நன்மைகள் உண்டாக்கின்றன. பாடசாலையைப் பொறுத்த வரை ஓர் ஆசிரியருக்கு வாளி வைப்பதினால் அவ் ஆசிரியரிடம் நல்ல பெயரைப் பெறலாம். அவ ஆசிரியரிடம் இருந்து விஷேட கவனிப்பு , உதவிகள் , கிடைக்கப்பெறலாம் , மிக முக்கியமாக பரீட்சையில் அப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறலாம். கடைகளில் வாளி வைப்பதால் ஓர் பொருளை உரிய விலையினை விட மலிவான விலையில் பெற்றுக்கொள்ளலாம். பல்கலைக்கழகத்தில் வாளி வைப்பதால் சிரேஷ்ட மாணவர்களிடம் நல்ல பெயர் எடுக்கலாம். அவர்களின் உதவிகளை ஆலோசனைகளைப்பெறலாம். அதைவிட முக்கியமானது இன்று பெண்களிடம் ஆண்கள் வாளி வைத்தால் மட்டுமே அவர்களின் நட்பை  இலகுவில் பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. வாளி வைக்கும் ஆண்களுக்கு தான் அதிகப்படியான பெண்நண்பர்கள் காணப்படுகின்றனர். இப்படி வாளி வைத்தலின் பயன் பாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 


எனினும் அளவுக்கு மீறி வாளி வைப்பதினால் சில பிரச்சனைகளும்  உருவாகின்றன. உதாரணமாக பெண்களுக்கு வாளி வைப்பதினால் ஆண் நண்பர்களின் விரோதத்தை எதிர் நோக்க வேண்டி இருக்கிறது. ஆசிரியருக்கு வாளி வைத்தலினால் சக மாணவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். எனவே இப்பிரச்சனைகளையும் கருத்திற்கொண்டு வேண்டிய நேரத்தில் 

அளவோடு வாளி வைத்து வாழ்வில் வளம் பெறுவோம்...


அடுத்தவர்களின் கருத்துக்கள் வெகு விரைவில்..........................................

Thursday, July 15, 2010

L Canteen சீனியர்... அன்பு தங்கைமாருக்கு.....

பொறம்போக்காய் திரிந்த சில சீனியர்...
இன்று ரிபோக் போடுகின்றனர்.... உனக்காய்...
NOLIMT பக்கம் போகாதவர் பலா் -அங்கு
UNLIMIT ஆய் ஆடை எடுக்கின்றனர்.......

தாடியுடன் இதுவரை அலைந்த சிலர்..-தலையில்
முடியின்றி திரிகின்றனர் பலர்.....
BODY ஐ ஏத்த ஜிம் செல்வோரும் உலர்...
உங்களுக்காய் இனி இதை செய்வோர் எவர் ?

பெற்றோருடன் கதைத்து எத்தனை மாதங்களோ ??
உறவுகளுடன் கூடி பழகி எத்னை வருடங்களோ? ஆனால் - பல
இரவுகள் படிப்பு போனது உங்களுடன் கதைப்பதால்...
  உங்கள் அன்பிற்கு 1000 நிமிடங்கள் போதாது Blaster ல்  (நம்புங்கள்..)

எங்களுக்கு சோலிகள் பல இருந்தாலும்....
எம்மை பலர் கேலிகள் பல செய்தாலும்..
எமக்கு பல வேலிகள் போட்டாலும்..
உங்களுக்கு வாளி வைக்க மறக்கமாட்டோம்.


நாசக்காரர்கள் என வாய் கூசாமல்
பேசுவது எங்களுக்கு கேட்கிறது.....
 பாசம் காட்டி வேசம் போட்டாலும்..
உங்களுடன் நேசத்துடன் தான் பழகுகிறோம்..

உன் குரல் காக்கா குரல், பொறுக்கவில்லை என்றாலும்.....
கானக்குயில் குரல் என பொய்யுரைக்க மறக்க வில்லை.
இந்த அண்ணன் மாரை மறந்து விடாதே உன் வாழ்வில்....
உன்னை அழகி என்று கூறுவது நாங்கள் மட்டுமே உன் வரலாற்றில்..


நான் பயந்து கொண்டே பயமுறுத்துகிறேன்.....
எனக்கும் உனக்கும் வித்தியாசம் ஒன்றுதான்...
நீ பயப்படுவது போல் நடிக்கிறாய்.........
நான் பயப்படுத்துவது போல் நடிக்கிறேன்.....

தினம் L வந்து  செல்கிறோம் - நாங்கள்
உங்களை வதைக்கவில்லை.... கதைக்கிறோம்..
குணம் கொண்ட சீனயர்ஸ் நாங்கள்.... - உங்கள்
மனம் நோக வதைக்கமாட்டோம்...( பொய்கூறவில்லை..)

எங்கள் உறவுகள் 3 வருடங்கள் அல்ல
வாழ்வின் விழிம்பு வரை - ஏன் எனில்
நீங்கள் எங்கள்  அன்புத்தங்கைகள்..
நாங்கள் உங்கள் L Canteen சீனியர்கள்....

Saturday, June 5, 2010

என்ன உலகம்டா.. ??

என்ன உலகம்டா இது.....
கவிதை வடித்தேன் காறித்துப்Pயது..
கதை எழுதினேன்.. கண்றாவி என்றது..
பாட்டு படித்தேன் பித்தன் என்றது....
நாடகம் நடித்தேன் நாசமாபோச்சு என்றது..

முன்னின்று உழைத்தேன் மூதேசி என்றது..
பன்ஜ் வசனம் சொன்னேன் பரதேசி என்றது...
உதவி செய்தேன்.. உதவாக்கறை என்றது..
நல்லதை செய்தேன் கெட்வன் என்றது...
கெட்டதை சொல்ல நல்லவன் என்றது..


பெண்களிடம் நட்பாய் கதைத்தேன் “வாளி ” என்றது..
குருவை மதித்தேன்.. “குழையடி ” என்றது..
நண்பனோடு நெருங்கி இருந்தேன் “நகிரினா.. தகிரினா  “கோவா” ”என்றது..
நண்பணை தள்ளி இருந்தேன்....“துரோகி ” என்றது..
பெரியோரை கீழ்படிந்தேன்.. “பம்முறான் ” என்றது..

ஏழ்மைக்கு உதவினேன்... ''நடிக்கிறான்" என்றது..
தாழ்மையிலும் சிரித்தேன்.. செருக்குபிடித்தவன் என்றது..
Addidas T-Shirt போட்டேன்.. அண்ணனின் “ஓசி ”என்றது
தலை நிமிர்ந்து நடந்தேன் தற்பெருமை என்றது.......
கம்பீரமாய் நடந்தேன்.... “உனக்கென்ன பைல்சா” என்றது.....

காதலிக்கிறேன் என்றேன்.. “காமடி பண்ணாதே” என்றது
கதை கதையா அளந்தேன் கலைஞன் என்றது..
செந்தமிழை பைந்தமிழில் வீசினேன்... கவிஞன் என்றது......
தன்மையாய் பழகினேன்... முரடன் என்றது.....
கடைசியில் ...உண்மையை சொன்னேன் வதையன் என்றது...

Friday, June 4, 2010

காதலிப்போரை கண்டுபிடிப்பது எப்புடி ?? பாகம் -2


இனி நாங்க நெக்ஸ்டு லெவலுக்கு போவம்...........

கொஞ்சம் முத்தின கேசுகள்...

..
......... என்னடா இவனுக்கு வேற வேலை இல்லையா... யாரையும் நோண்டுறதே வேலையா இருக்கானே என்டு நினைக்கிறவங்கள உங்கட மைன்ட் வோஸ்சை வச்சு கட்ச் பண்ணிருவன்......................
அதுலயும் நீங்க அப்புடி மறைக்கிறவங்களா இருந்தா தயவு செய்து கொமண்ட் பண்ணாதீங்க... அதுல வச்சு உங்களயும் பிடிச்சுருவன்......


சரி நான் கதைக்கு வாறன்.......

இதுல பல வகை இருக்கு
1  படிக்கிறவங்க
2 வெளிப்டையா இருக்கிறவங்க
3 ஊமைக்குசும்பங்கள்
4 வெட்டிப்பயலுவ
5 பந்தா காட்டுறவங்க

யாருடைய லவ்வையும் ஈசியா பிடிச்சிறலாம் ஆனா... படிக்கிறவங்கட லவ்வ பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்.. ஏன்டா அவன் தன்ட லவ்வு வெளில தெரியாம இருக்க அறிவுத்தனமா யோசிப்பான்......
இப்ப கூடுதலா போன்ல தானே காதல் ஓடுது.....
போன் வந்த ஆரம்ப காலத்துல தன்ட ஆள்ட பெயர தன்ட பிரண்டுட பெயரில சேவ் பண்ணி வைக்கிறது.
அடுத்தது.. கதைக்க குள்ள ஆயரத்துக்கு ஆயிரத்து ஒருதடவை “டேய்” போடுறது.... “அப்பிடியாடா..“ஏன்டா”.. “எதுக்குடா”... என்டு.. .. ஏன் என்டா.. தான் பொடியனோடதான் கதைக்கிறத மத்தவங்களுக்கு confirm பண்ண வைக்கிறாங்கலாம்டியோவ்........
அது எவ்வளவு காலம் தான்.. குயில்ட கள்ளத்தனம் பிடிபடாம இருக்கும். அவன் அப்பாவாகி தன்ட மகன் இப்பிடித்தான் செய்வான் என்டு  திங் பண்றதுக்குள்ள.. .....
அவன் ட்ரெண்ட மாத்திடுவான்..
பிறகு தங்கட ஆள்ட நம்பர பாடமாக்கி வச்சிருந்தாங்க..... அவங்களுக்கு பள்ளிப்பாடம் எல்லாம் பாடம் வருதோ இல்லையோ..... இதல்லாம் நல்லா பாடம் வரும்.......... அதுவும் பெயிலியராக.....

இப்ப புது ரெண்டா அல்லோ ஜூஸ் பண்றாங்க.....
ஆமாங்க நான் இப்பதான் கண்டு பிடிச்சன்.... தன்ட ஆள்ட நம்பர.. அப்பா, அக்கா, அம்மா ..... என்டு சென்டிமென்டான பெயரில சேவ் பண்றாங்கப்பா.....
நம்மட கம்பஸ் பொடியன் ஒருவன் இதுல என்கிட்ட மாட்டு பட்டான்... அது எப்புடி என்டு சொல்றன் பாருங்க....
அன்டைக்கு அவனின் சில பல நடவடிக்கைகள்.... தாறுமாறக போனது நம்ம கண்ணில் மாட்டு பட.. அவன்ட போன கேட்ட .. பயப்படாம தந்துட்டான்... என்னடா இவன்.... ரொம்ப நல்லவனா இருக்கே என்டு போன் மெசேஜ்கள பார்த்தா......
அப்பாவும் அக்காவும் ஒரே மெசேஜ் அனுப்பி இருக்காங்க.. அது அவன்ட சொந்த matter  என்டு  தலைய நுளைக்க விரும்பாத போதும்..... அப்பா எல்லாம் மெசேஜ் அனுப்புறது... எங்கயோ  லைட்டா இடிக்க அந்த மெசேஜ்ஜ திறந்து பார்த்தா...
அப்பா அவனுக்கு காதல் கவிதைகள் அனுப்புறார் என்டா பாருங்களேன்...
I love the way you look at me,
Your eyes so bright and blue.
I love the way you kiss me,
Your lips so soft and smooth.
என்ன கருமாந்திரம் டா என்டு அங்காள பார்த்தா.. அவன்ட அக்கா.. 
When all the songs are over
and all the words been said
The sun grows dim across the sky
and the world prepares for bed

I oft can take a moment now
to view the sky above
and whisper God a simple prayer
to thank him for your love 
இப்பிடி மெசேஜ் எல்லாம் .... அக்கா ... அப்பா அனுப்புற மெசேஜ்சா என்டு செக் பண்ணினா.. சிங்கம் சிக்கிட்டு.... 
பாவம்..பாலை ஆட்டய போட்ட  பூனைக்குஞ்சு போல தம்பியர் முழிக்கிறேர்... 
பிறகு என்ன ... அவன வச்சு நம்மட பொடியங்கள் வாட்டி வதக்கி.. சம்பல் போட்டுருப்பாங்க.. இதுல நான் இல்ல...நான் நல்லவன்க.........


மட்ட பொடியங்க இருக்காங்க....
செம ஊமைக்குசும்பங்கள்..... கு...கு....கு..... குந்தினா கூடி சத்தம் வராமத்தான் குந்துவாங்க..... சிகரட் அடிச்ச பூனை அடுப்பங்ரையில போய் புகை விட்ட மாதிரி ....தங்கட விஷயம் வெளில போகாம..... ஆனா அவங்க குந்துற இடத்துலதான் நாங்க வைக்கிறம் ஆப்பு........................
ஆமைட தலையக்கூடி வெளில இழுத்து எடுக்கலாம்....ஆனாஎவன் ஊமைக்குசும்பனா இருக்கிறானோ... அவன்ட விஷயம் எலிக்குஞ்சு அமத்தி வச்சுருக்கிற உடுப்பு மாதிரி.... அது உடுப்ப எங்க எங்க ஒளிச்சு வச்சுருக்கும் என்டே தெரியாத மாதிரி அவன் அமத்திட்டு இருப்பான்... அதால...அவன் மேல் இரண்டு வாட்டி கண்வைங்க..... தம்பி எங்கயோ தள்ளாடுறேர் என்டு அர்த்தம்.....


வெளிப்படையா இருக்கிறவன பத்தி நாம கதக்கவே தேவயில்ல... அதான் அவனே வெளிப்படையா இருக்கிறானே... என்டு விட்டுடாதீங்க.... ஊமைக்குசும்மப் எலிக்குஞ்சு அமத்தின உடுப்பு என்டா......இவன்....கங்காருட வயித்துக்குள்ள பூந்து கிடக்கிற.... கங்காருகுஞ்சுலே......  இவன் ரெண்ட மாத்திர கேசு... கவனமாத்தான் டீல் பண்ணணும்...

வெட்டிபய காதல்.......  எப்பவும் வெட்டியாத்தான் இருக்கும்.. ஆனா கெட்டியானது....... சோ.. இத பத்தி நாம  டோன்ட் ஹெயார்..

பந்தா காட்டுறவன்.... பொம்பளங்களுக்கு ரொம்ப பந்தா காட்டுவான்.... நம்மட பொம்பளங்களும் ஈஈஈஈஈஈஈஈஈஈ என்டு இளிச்சுட்டு போகும்.... எவன் பந்தா காட்டுறானோ.. அவங்களத்தான் பொம்பளங்க நம்பும்.. நம்மல மாதிரி நல்ல பயலுவகள எங்க நம்புதுக... பெண்புத்தி பின் புத்திதானே... அவங்கள சொல்லி குறையில்ல... ஆண்டவன சொல்லனும்.... சரி விடுங்க.. அவனாவது சந்தோசமாக வாழட்டும்.......

இன்னொருவங்க இருக்காங்க..... அவிட்டு விட்ட மாடு போல... அங்க இங்க என்டு ரோட்டு ரோட்டா திரிஞ்சு லவ் பண்றாங்களாம்..... KFC  அடில போய் நிப்பாங்க... பஸ் டேன்டில் போய் நிப்பாங்க... ஏன்.... விட்டா வெள்ளவத்த மார்கட்டில போய் காய் கறியும் விப்பாங்க..... இவங்கட கொசுத்ததொல்ல தாங்க முடியலப்பா...... யாரையோ லவ் பண்ணுவாங்க..  அந்த பொட்ட போற இடமெல்லாம் வழமையா பின்னால தான் அலைவாங்க... இப்ப இவங்க புது ரெண்டா கண்டு பிடிச்சிருக்காங்க.....ஒன்டு... பொம்மள பிள்ளைகள் போன அதுக்கு முன்னால போற.... இடைக்கிடையில ஏதோ காலில் தட்டுபட்ட போல திரும்பி அந்த பிள்ளைகள பாக்கிற....... இல்லாட்டி யாரையும் தேடுற மாதிரி..... பண்ணி குப்புற படுத்தா..அத பாத்த எருமை மாடு மல்லாக்க படுக்குமாம்.....
அதேகதையா.... இவங்கள் பாக்கிறாங்கள் என்ட உடனே.. அந்த பொம்பள பிள்ளைகளுக்கு கெப்பர்(எழுப்பம்) ஏறிடும்... பிறகு... காக்கைய பாத்து மயில் என்டு கூப்பிட்ட கணக்கா... தங்கள விட்டா ஆளில் இல்ல என்ட கனக்கா திரிவாங்க...

இன்னொரு பசங்க கூட்டம் இருக்கு....  அவன் லவ் பண்ற பொண்ணு ஒரு ரோட்டால போகும்.... அதுக்கு அடுத்த ரோட்டால போய் ..... அந்த பிள்ளைக்கு முன்னால போய் மடக்குறது...... எப்பிடி எல்லாம் யோசிக்கறாங்கய்யா.....

இன்னும் கண்டுபிடிப்புக்கள் தொடரும்.....

Friday, May 28, 2010

ராகிங்...

“ராகிங்” இந்த வார்த்தைய கேட்ட உடனே என்ன சும்மா அதிருதுல்ல... என்டு நான் சொல்ல வரல....அது ஒரு சுவாரஸ்யமான விசர்வருகின்ற நிகழ்வுகள் ....
முடிவா நீ இப்ப என்ன சொல்ல வர்றா என்டு தானே கேக்குறீங்க... ஏன்னா எனக்கு ராகிங் வேண்டுறது....ஜாகிங் போற மாதிரி...என்டு எனக்கு சொல்ல மட்டும் ஆசை இருக்காதா... ஆனா அது அப்பிடி இல்லங்க... உதாரணத்துக்கு ஐஸ்கிறீம்ம உங்க முன்னாடி வச்சுட்டு சாப்பிடு ஆனா.. வாயால இல்ல .. மூக்கால என்டா உங்களுக்கு எப்பிடி இருக்கும்... அதான் ராகிங்கு..ஆசை காட்டி மோசம் பண்றது...


என்னதான் யுனவர்சிட்டில ராகிங் அதுகல முற்றாக தடை செய்தாலும்.... ராகிங்க நம்மட பயபுள்ளக விட்ட மாதிரி தெரியல... அதோட அந்த நேரத்ததில கிடைக்கிற அனுபவங்கள கட்டாயம் அனுபவித்துதான் ஆகனும்... அது ஒரு தனி சுகம்...... (எப்புடி எல்லாம் பில்டப் பண்ண வேண்டி கிடக்கு...)

சரி நான் இப்ப ராகிங் என்டதுல முக்கியமா உடல் ரீதியான ராகிங்க நான் இங்கு குறிப்பிடல... ஆனால கதைச்சு கதைச்சு அறுப்பாங்களே(அதாங்க நான் உங்களுக்கு. இங்க செய்றன்) அத பற்றிதான் கதைப்பம் மன்னிக்கவும் அறுப்பம் என்டு நினைக்கிறன்...


ராகிங்ல அறுக்கிறதுல பலவகை இறுக்கு....
சிலர் கதைச்சாலே அறுவ.... இன்னும் சிலர்... நாங்க கதைக்காட்டி வதைப்பாங்க.. மொத்தத்துல சொல்லப்போன.. அது ஒரு ராகிங்க.....என்னால ராகிங்க ராகிங் என்டுதான் சொல்ல முடியும்... அதுக்கு வேற விமர்சமமே கிடையாது....
சிலர் அறுப்பாங்களே அறுவ.... தாங்க முடியாது... “டேய் நீ கதைக்கவே வேணாம் வேணும் என்டா உன்ட ரூம்முக்கு கூட்டி போய் அடிடா.... தயவு செய்து இப்பிடி மட்டும் அறுக்காத” என்டு சொல்ல தோணும்... ஆனா என்ன சீனியர் என்ட படியால அடக்கிட்டு இருக்கனும்.... (நான் வாயச் சொன்னன்...)

இன்னொரு வகை  வதைக்கிறவன் கதைக்கவே மாட்டான் ... ஆனா எங்கட கதைய நிப்பாட்ட விடமாட்டான் ... ஏதாவது கதைக்க விடுவான்.. பாட விடுவான்.... நாங்க கதைச்சு கதைச்சே எங்கட வாய் நோகும்.. செமயா களைக்கும்.... நான் இங்க தாங்க கதைச்சு களைச்சத கண்டு இருக்கன்.... எங்க தான் பிடிச்சாங்களோ இப்பிடி பட்ட  ராகிங்க... சத்தியமா சொல்றங்க.. இதுக்கு கிணத்துல விழுந்து சாகலாம் போல கிடக்கும்... இப்பதான் விளங்குது.. பல யூனிவர்சிட்டில பல தற்கொல நடக்கிறது உடல் ராகிங்கால இல்ல... இவங்கட கதையால என்டு....

சிலர் பண்ணுவாங்களே ராகிங்... சின்ன புள்ள தனமா இருக்கும்... பிறகு என்னங்க.. நட்ட நடுராத்திரில எழுப்பி எங்கள “அ” னா “ஆ” வன்னா தொடக்ம்.... நிலா நிலா ஓடிவா........  (ஏதோ பக்கத்து வீட்டுல நிலா என்ட பொண்ண ஓடிவா என்டு கூப்பிடுற மாதிரி...)
சொற்றுனை வேதியன்.... என்டு படிக்க விட்டா சின்ன புள்ளத்தனமா இல்லாம... அவங்க தாங்க சின்ன புள்ளயில அனுபவிச்ச நரக வேதனைய இப்பிடியா எங்கள வச்சு பழி வேண்டுறது.... 

அதுவும் போன் எடுத்து வதைப்பாங்கப்பா..வதையிலும் வதை அதான்......
சிலவேலை யோசிப்பம் ... அட நமக்கு லூசா... இல்ல  அவனுக்கு லூசா என்டு....அவன் என்ன செய்றான் என்டே தெரியாது... “அம்மா” என்ட வார்த்தைய 1000 தரம் சொன்னா பருவால 10 000 தரம் சொல்லுடா என்டுவான்.... அவன் எங்கள சொல்ல விட்டு அவன் தன்ட வேலையபாப்பான்...
நாங்களும் ஆர்வக்கோளாறுள 10 000 க்கு 10 010 தரம் சொல்லி நல்ல பெயர் எடுக்கலாம் என்டு நினைச்சா... அங்க உங்க நினைக்க கொண்டு போய் பனை மரத்ததுல தொங்க விடுங்க.... அப்பிடி நாங்க முடிச்ச பிறகு சொல்லுவான் நான் உன்ன 10 000 தரம் சொல்ல சொன்னான் நீ ஏன் 10 010 தரம் சொன்னி.... அதால மறுபடி 10 000 தரம் சொல்லு என்டுவான்....  என்ன இப்ப விளங்குதா யாருக்கு லூசு என்டு.....

சில பண்ணிப்பலுவ இருக்காங்க....   நடுராத்திரில நாய் எப்பிடிடா ஊளையிடும் ..  அதே மாதிரி ஊளையிடு...... கோழி எப்புடி கூவும்... மாடு எப்பிடி கத்தும்...
 என்டு எங்களுக்கு டிஸ்கவரி சனல் ஓட்டுவாங்க (இதுக்கு ஏன்டா எங்கள கூப்பிடுறீங்க நாங்க என்ன zoo ஆ நடத்துறம்..)...... நாங்க போன் கதைக்கக்குல பக்கத்துல ஒருவன் நின்னான்னு வச்சுக்குங்க..... அவனுக்கு மரை கழன்டுடும்... பிறகு என்ன.. இவன் மனுசனோட கதைகிறானா இல்ல ஆடு .. மாடு பண்ணிங்க கூட கதைக்கிறானா என்டு... டௌட் வந்துடும்... பிறகு என்னங்க. நடுராத்திரில நாய் மாதிரி ஊளையிட்டா.. சந்தேகம் வராதா பின்ன..

சில பொடியங்கள்ட அப்பா அம்மா.. சாமியார்ட்ட எல்லாம் போய் என்ட மகனுக்கு பேய் பிடிச்சுட்டு போல கிடக்கு... நடுராத்திரில ஊளையிடுறான்.. கத்துறான்.. குடையுரான் ....கொஞ்சம் திறுநீறு ஓதிக்குடுங்க என்டும் கேட்டு இருப்பாங்க...

கதைக்கிறத விட்டு.. இனி எங்கள நோண்டியாக்கி பார்த்து தாங்க சந்தோசப்படுறவங்களும் இருக்காங்க.....
நாங்களும் எங்கட சீனியர்சும்.. சும்மா பப்ளிக்ல போவம்.. போகக்குள்ள ஒருவன் சொல்லுவான் “ அதோ அங்க வர்ற குரூப்ட போய்.. விவேகானந்தர் எங்கட தாத்தா..... மகிந்த எங்கட மாமா என்டு சொல்லு” என்டுவான்..(விவேகானந்தர் எவ்வளவு பீல் பண்ணுவார் பாருங்க..)அவன் பக்கத்துல வருவான் ஆன எங்களை தெரியாத மாதிரி..... நாங்க போய் அவங்கட்ட சொன்ன இவன் விட்டுடுவான்.. ஆனா அவங்க ஏதோ இந்த பொடியன்.. ஓவரா படிச்சு தலைல கிறுக்கு பிடிச்சுட்டு......... யார் பெத்த மகனோ.. இப்பிடி பைத்தியா அலைறானே என்டு வருத்தபடுவாங்க......

நீங்க My self  பற்றி எத்தனை தாள் எழுதுவீங்க.... சும்மா யோசிச்சு பாருங்க.. குறைஞ்சது 4 பக்கம்... அதுவும் இங்கிலிசுல..... ஆனா இவங்க 20 , 30 பக்கம் எழுதிட்டு வா..அதுவும் ஒரு நாளுல... சும்மா நமக்கு இங்கிலிசு என்னடாலே..ஒன்னுக்கு போகும்..அதுல 20 பக்கம் என்டா மோசன் கூடி போகும்.. “டேய் என்ன பத்தி நான் எப்புடிடா 20 பக்கம் எழுதுறது.. அம்மா அப்பா.. அம்மம்மா தொடக்கம்.. நம்மட நாய்க்குட்டி.. நாய்க்குட்டிட அம்மா அப்பா,..நாய்க்குட்டிட தம்பி.. அக்கா , லவ்வர்.. கள்ளப்புருசன்.. ” வரை எழுதினாலும் 10 பக்கத்த தாண்டாது......


பகிடி வதை தொடரும்........................

Sunday, May 16, 2010

காதலிப்போரை கண்டுபிடிப்பது எப்புடி ??


 என்னடா இவன்.... வதைக்கிறத விட்டுட்டு. காதல்......கட்டில்.......நுளம்பு என்டு தன்ட ட்ரென்ட்டை மாத்துறான் என்டு நினைக்கிறீங்களா ???.. அப்பிடியெல்லாம் ஒன்டும் இல்லங்க.....யாரை வதைக்கிற என்டு யோசிச்சு யோசிச்சு.... கடைசில
காதலிக்கிறவங்கள.... அதான் love பண்றவங்கள எப்புடி கண்டுபிடிக்கிற என்டு நான் கண்டு பிடிச்சுட்டன்...

லவ் பண்றவங்கள பல வகை..... ஒருவன் ஒரு பொம்பளய (பொம்பளைகளை மட்டும் லவ் பண்றவங்கள் ) லவ் பண்ண தொடங்குற முதல் ஸ்டேஞ்.. பிறகு.. அப்பிடியே டெவலப் ஆகி.. ஆகி.... போய்.... சக்சஸ் ஆகிறது கடைசி ஸ்டேஞ்.. இல்லாட்டி அவள் எஸ்கேப் ஆகிறது கடைசி ஸ்டேஞ்...
இரண்டாவது கடைசிஸ்டேஞ்ல.. பல உட்பிரிவுகள் இருக்கு.....
    1 - அவனுக்கு மரை கழல்றது.....
    2 - அவன் அவளை கழட்டி விட்டு இன்னொன்டோட சுழல்றது...
    3 - இல்லாட்டி அவன் தண்ணி அடிச்சு... பண்ணி போல கிடக்கிறது..
    4 - etc....













நான் என்ன பாடமா நடத்துறன்...   1,2,3...... என்டு நோட் பண்ணி... அதுல உட்பிரிவு... வெளிப்பிரிவு.. .என்டு சொல்ல நீங்களும் பாத்து கொண்டு இருக்கீங்க..... உங்களுக்கு அறிவு இல்ல.....  சரி .. சரி.. கடுப்பாகாதீங்க.... (என்ன நீங்க இன்னும் கடுப்பாகலயா....) சரி... நான் விஷயத்துக்கு வாறன்...


இப்ப நான் கதைக்கப்போறது.... முதல் ஸ்டேஞ்.... எப்பவும் .. ”அ”னா... ”ஆ”னா...
ல இருந்து தானே தொடங்கனும்....இப்ப நாங்க லவ் பண்ண தொடங்குறவன எப்புடி கண்டு பிடிக்கிற என்டு பாப்பம்....


மு.கு - உங்களுக்கும் கண்டுபிடிக்கிற வழி ஏதாவது தெரிஞ்சா Comments இல்                                சொல்லுங்க.... நாங்கள் அதை வரவேற்கிறோம்....
முதலாவது ஐடன்டிவிகேசன் என்னன்டா....  - எப்ப ஒருவன் தான் லவ் பண்ற பொட்டைக்கு முன்னால நல்லவன் ஆகிறானோ...... அவனுக்கு “மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ...வந்தல்லோ....” தான்.....

உதாரணத்துக்கு..... அவனும் அவனோட கொஞ்ச பிரண்ட்சும் நிக்கிறாங்க என்டு வச்சு கொள்ளுங்களேன்.... அதோட அவன்ட ஆளும் (அவனுக்கு மட்டும்)  நிக்குறாள் என்டா.... அந்த வழியால போற பொம்பள பிள்ளைகளை எல்லா பொடியங்களும் பாப்பாங்க.. ஆனா.. இவன் மட்டும் பாக்க மாட்டான்... ஏதோ வாழ்கையில பொம்பள பிள்ளைகள பாக்காத மாதிரி..... ஆனா... அவள்... போற வாற.. பொடியங்கள நல்லா...(-----------------){நீங்களே இடைவெளிய நிரப்புங்க..}  

இரண்டாவது.....தங்கட வீட்ட தண்ணி வராட்டி கூடி அவளுட்ட ஏதோ...... உலகத்துலயே தங்கட வீட்ட மட்டும் தான் தண்ணி வரல.... என்டு... உலகச்செய்தி மாதரி.. தன்ட விஷயம் எல்லாம் சொல்லுவான்....
இதுக்கும் ஒரு உதாரணம் பாத்தா... அவனுக்கு ஒரு நுளம்பு கடிச்சுட்டு என்டு வைங்களேன்....ஏன் கடிக்காட்டியும் அவன் ஒரு ஊசியா தன்ட கைல குத்தி போட்டு வந்து ...... எம்மாம் பெரிய நுளம்பு எனக்கு கடிச்சுட்டு தெரியுமா....... 2 லீட்டர் இரத்தத்த குடிச்சுட்டி போய்ட்டு... என்டு கதை விட்டாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்ல...
அதுக்கு அவள்....ஏதாவது பதிலா... நீங்க அதை அடிக்கலயா என்டு கேட்டா..
அதுக்கு அவன்
இல்ல அத பாவம் என்டு விட்டுட்டன்...... என்டு வடிவேல் சொல்றமாதிரி இருக்கும் அவன்ட கதை.... ஏன் இன்னும் விட்டா போகக்குள்ள அந்த நுளம்பு எவ்வளவுதான் இரத்தத்த குடிச்சாலும் ஒன்னுமே செய்யா இருக்கிறானே.. இவன் ரொம்ப நல்லவன்டா..................... என்டு சொல்லிட்டு போன என்டும் சொல்லுவான்.....  

நெக்ஸ்ட்டு.. பீலிங்கு...
என்னா... என்னாப்பீலிங்கு என்டு பாக்கிறீங்களா.....
பொம்பளங்கள அடேக் பண்ற வழி என்ன தெரியுமா.. அனுதாபம்... அதாங்க சிம்பதி..... (ஒருவன் sympathy creat பண்றான் என்டா.. .அவனுக்கு டாலர் குத்த வேண்டியது தான்.. )
ஆமாங்க... அனுதாபத்துக்கு மடங்காத பொம்பளங்களே இல்ல.... (நான் இங்கு பொம்பளங்கள பற்றி மட்டும் குறிப்பிடுறன்..)  நீங்க வேணும் என்டா உங்கட நாய் குட்டி செத்து போய்ட்டு என்டு முதலைக்கண்ணீர் வடிச்சு பாருங்களேன்.... நாளைக்கு அவள் உங்களுக்கு புது நாய்க்குட்டி கொண்டு வந்து தந்தாலும் தருவாள்... (ஆனா... இது எங்கட கம்பசுல படிக்கிற எங்கட பொம்பள பிள்ளைகளுக்கு மட்டும் apply ஆகாது என்டு நினைக்கிறன்...... ஏன்டா அதுகள்.. நாங்க மண்டய போட்டா கூடி கை கொட்டி சிரிக்குற கேசுகள்....... ) lol :P சும்மா லொலலொலா.....



இப்பிடி இன்னும் இருக்கு.. மிச்சம் அடுத்த பாகத்தில்......................................


தொடரும்...........................


பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்....  !!! உங்களை அறுப்பதற்கல்ல.... என்னை திருத்துவதற்கு !




Tuesday, April 27, 2010

தாக்குதல்







மூன்று நாட்களாக எனக்கு சரியான தூக்கம் இல்லை. காலையில் எழும்பி பார்த்தால் முகம் கை கால் உடம்பெல்லாம் காயங்கள்.... தழும்புகள்.என்னால் முடியவில்லை....யாரோ என்னை தாக்கி விட்டு தப்பிச்சு போறாங்கள்.... என்ன வென்றே ஊகிக்கவே முடியவில்லை.யார் என்டும் தெரியல......

நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்.. எனது வாழ்கை பிளேஷ்பெக்கை அப்பிடியே திருப்பினேன்.....
நொய்.........
........................


ஒரு வேளை அவனா இருக்குமோ..... ஆமா அவன் தான்... அவன்ட பெயர்ட முதல் எழுத்து “கு” , கடைசி எழுத்து “ரு” ... மொத்தம் 2 எழுத்து பெயர்... அன்டைக்கு அவன்ட வீட்ட போய் சொக்கலட்ட களவாடி திண்டதுக்காகத்தான் இப்பிடி செய்திருக்கனும்....ஒன்டா இரண்டா.... முழுசயும் அல்லோ.... சீ சீ... அவனுக்கு அப்படி தைரியம் வராது....சின்னப்பயபுள்ள....
கத்திய கண்டாலே கத்துறவன்....


அப்ப இவனா இருக்குமோ?  கரிஈசன் .. அன்டைக்கு அவனுக்கு செய்த வேலைக்குதான் இப்பிடி செய்திருக்கனும்.... அவன்ட Face book ல....  ச்சே... அவனுக்கு அவன கண்டாலே பயம்.... பிறகு எப்புஎ என்ட பக்கம்???  வர மாட்டான்.


சில வேலை எங்கட கம்பஸ் பிள்ளைகளா இருக்குமோ.. அதுகளுக்கு செய்ற அநியாயத்துக்கு அதுகள் தான் பழி வாங்கி இருக்க வேண்டும்.... பென்சில் கூராலத்தான் குத்தியிருக்க வேண்டும்... எப்பவும் அதுகள் தங்களுக்கு என்டு வச்சிருக்கிற ஆயுதம் பென்சிலும் , வட்டவாரியும் தானே.....


 அன்டைக்கு அந்த ஆ.வா வுக்கு நான் கடுமையா மொக்கை போட்டுட்டன்... அவள்தான் இப்படி குத்தியிருக்க வேணும்.. முகம் , கை , கால் எல்லா இடமும்.. படு பாவி... ஈவு இரக்கமே அவளுக்கு இல்லையா??..... ஆனா அவள் பூனை என்டாலே கண்டீன் அலற கத்துறவள்....ம்..... அவளாகவும் இருக்காது...
அப்ப மட்டவள்.....  மங்களம்ஸ் ஆகத்தான் இருக்க வேண்டும்....... அவளுக்கு அடிக்காத நக்கலா... இல்ல அவள் எங்களுக்கு ஏசாத பேச்சா ?? அதுக்காக அவள் இப்பிடி பழிவாங்குவாள் என்டு நினைக்கல... நயவஞ்சகி ....நல்லவ.............என்டு நம்பினது தப்பாயிட்டு.. அப்பவே அம்மா சொன்னவ....


சீறும் பாம்பையாவது நம்பலாம்... ஆனா சிரிக்கிற பொம்பளங்கள நம்மாதடா என்டு... அப்பவே நான் கேட்டு இருக்கனும்.... மனசுல கொஞ்சமாவது ஈரம்மிருக்கா....மனிதாபிமானம் இல்லாம் இரத்தம் வர்ற அளவுக்கு குத்தியிருக்காளே.... படு பாதகி.... இவள் கட்டாயம் பென்சிலாதான் குத்தியிருக்க வேண்டும்... எப்பவும் பென்சிலும் கையுமா திரியக்குள்ளவே நான் சுதாகரிச்சிருக்க வேண்டும்.......  இருந்தாலும் அவளுக்கு அவ்வளவு தைரியம் இருக்காது.. அவளுக்கு வெறும் சீன் மட்டும் தான் போடதெரியும்.... சீரியஸா எதுவும் செய்ய மாட்டா....



ஆமாம் .....ஆமாம்.... ஆள பிடிச்சுட்டன் நம்ம இடியமீனாகத்தான் இருக்க வேண்டும்.... அவன் பாக்கிற பார்வையே சரியில்ல.... கொலைவெறியோட தான் பாக்கிறவன்... ஆனா.. அவன் இங்க வந்தா ... அவன்ட கப்பு அவன காட்டி குடுத்திருக்குமே.......அவனாவும் இருக்க முடியாது..



நம்மட கட்டை.... சீ சீ.... அவனுக்கு என்ட கட்டில் எட்டியிருக்காது... ஆகவே அவனும் இல்ல....


இல்லாட்டி.. எங்க உயர்ந்த மனிதர்.. சே - - ன். இருக்கும் ... இருக்கும்.. அன்டைக்கு அவன்ட வீட்ட போய் வீட்ட நாசம் பண்ணினதும் இல்லாம... அவன அவன்ட அம்மாக்கு முன்னாலயே கட்டிபோட்டு அடிச்சத.... நெஞ்சில, நஞ்சா வெச்சு செய்திருப்பான்... அந்த நயவஞ்சகன்....
ஆனா அவனுக்கு வதையன் என்னா பயம் ( (வேதநாயகம் என்னா பயம் வேட்டக்காரன் படத்துல வந்த பாணியில்)!!!!!! அப்ப அவனும் இல்ல..


அப்ப எங்கட J.K  குட்டி... அவன் சைவம்... இரத்தம் பாக்காதவன்... அவன் ஒன்லி இறைச்சி....


அப்ப யாரா இருக்கும் ... என்ன ரூம் மேட்... இருக்காது.... என்னை அடேக் பண்ணிவன் அவனையும் அல்லோ லைட்டா அடேக் பண்ணிட்டான்...

அதுக்குள்ள என்ட...சகபாடி “மச்சான் இந்த ஏறியால குடுக்காரன் திரியிறவங்கடா.... அவன் nice knife எல்லாம் வச்சுருக்கான் மச்சான் ... அவன்ட வேலை தான் இது...”
ஆனா வந்தவன் ஏன் என்ன தாக்க வேண்டும்... அவனுக்கு தேவையானத அவன் எடுத்தல்லவா பழக்கம்....

சரி.... சந்தேகப்பட்டது போதும்... நாளைக்கும் அவன் வருவான்... நானும் எனது நண்பனும் சேர்ந்து சீரியஸா பிளேன் போட்டம்..... இதான் அந்த பிளான்.....
?????????????????????????????????????????????????????????????????
????????????????????????????????????????????????????????????????????
???????????????????????????????????????????????????????????????????????
????????????????????????????????????????????????????????????????????????????(என்னன்டு பாக்கிறீங்களா.......Plan is very very....... (அதான்பா... டாப் சீக்கிரட்டு) secret .. அதாங்க உங்க கண்ணுக்கு தெரியல....)
....
........
...........
..............
................
அடுத்தநாள் இரவு...... அனைத்து ஆயுதங்களும் சரி... எனது தலையணைக்கு பக்கத்துல வீச்சரிவாள்......வந்தா ஒரே வெட்டு.....
 புருஸ்ட கட்டிலுக்கடில அலவாங்கு.... அந்த தேவாங்குட தோலை கிழிச்சு தொங்கவிடுற அளவுக்கு ஆயத்தம் எல்லாம் சரி....
நான் தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டேன்.... அணைத்து லைட்டும் ஃஓப் பண்ணயாச்சு.... எனது உடல் அசைவற்று கிடந்தது.....அவனது வருகையை எதிர்பார்த்து இருந்தோம்..... ஆம் அவன் வருவது போல் இருந்தது....
ஆம் வந்துவிட்டான் எனது ரூமுக்குள் நுளைந்து விட்டான்...  எனக்கு உள்ளூர பயம் இருந்தாலும்.... மாத்தள மாரியம்மனை நினைச்சு கொண்டு தைரியத்த கொஞ்சம் கடன் வாங்கி....எனது ஒரு கை வீச்சரிவாளை எடுக்க தயாரான போது..தான் மூளை சொன்னது.. அவன் அலர்ட் ஆயிடுவன் .....அதால் அவன அடிச்சு வீழ்த்தி பொலிஸிடம் குடுப்பம் என்டு.... சரி..ஓகே... அவன் எனக்கருகில் வந்துட்டான்..... நான் சந்தர்ப்பத்தை காத்துக்கொண்டுறிக்கிறேன்.... அவன் என்னை சுத்தி சுத்தி எதையோ தேடுறான்..
அங்கு போறான் எனது உடுப்பில் ஏதோ தேடுறான் ... காசாக இருக்குமா ????
மறுபடியும் வருகிறான்.... என் நண்பன் அருகில் சென்று அவனை பரிசோதிக்கிறான்.... அவனுக்கு பேதி புடுங்கியிருக்கும்... வேர்த்து கொட்டுது....
மறுபடியும் என்னிடம்....என் காலடியில்.... அப்படியே என்நெஞ்சருகில்......... இடைக்கிடையில எனக்கு கிச்சு மூச்சு வேற செய்றனா்.. என்னால் முடில.... கடைசியா எனது காதறுகே வந்துட்டான் .... ஆம்... இதுதான் சரியான சந்தர்ப்பம் விட்டேன் ஒரு அடி......

 ஐயோ !!!!!!!!!!!!!!! பாவம் செத்துவிட்டது அந்த நுளம்பு... !!!!


பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்....  !!! உங்களை அறுப்பதற்கல்ல.... என்னை திருத்துவதற்கு !!!!

Thursday, April 22, 2010

அணை

மழைக்காலம்..அந்தி சாய்ந்த நேரம்...
அலுப்போடு உறங்கினேன் கட்டிலில்..
காரணம் நான் நடந்து வந்த தூரம்......
கவனிக்கவில்லை உன்னை என் அருகினில்

என் கை உன்னை தொட்டபோது 
மென்மையை உணர்ந்தேன்... 
அன்றய கூதலினால் உஷ்ணத்தை விரும்பியது 
உன்மேல் காதலினால் என்னுடல் உன்னை தழுவியது..

நான் நித்திரை கொள்ளவில்லை உண்மை தெரியவில்லை 
இறுக்கி அணைத்துக்கொண்டேன் நீ ஏதும் பேசவில்லை
மூச்சும் இல்லை உனது பேச்சும் இல்லை...
நான் எல்லை இன்றி தொல்லை செய்த போதும்..
உன்னிடம் இருந்து எதிர்ப்பேதும் இல்லை....

கட்டியணைத்தேன்.... முத்தமிட்டேன்.....ஏற்றுக்கொண்டாய்
எட்டி உதைந்தேன்.... ஏறிமிதித்தேன்.... பொறுத்துக்கொண்டாய்..
உனது மனம் மிகவும் மென்மையானது.. உனது பஞ்சான மேனியை போல்...
எத்தனை கொடூரங்கள் செய்தேன்.இனிமேல் முடியாது என்னால்

இரவு முழுதும் எனக்கும் உனக்கும் எத்தனை சண்டைகள்
காலையில் எழுந்தேன் கண்கள் திறக்கவில்லை....
அம்மா வந்தார் ”என்னடா இது கோலம்....படுத்தியிருக்கபாட்ட பார் . ”
பாவம் எனது காலிடுக்கில் மாட்டிக்கொண்டிருந்த தலையணையை நோக்கி.!







Monday, April 19, 2010

255 சிறு விபரணை..... கவனம்..



யாருக்கும் 255 என்டா “டக்” என்டு விளங்கும்.... ஏனென்றால்....  அந்த பஸ்ஸினுள் நிற்க கூட இடம் இல்லாட்டியும்.... பலர் அங்கு தொங்கிட்டு போவதற்கு கூடி போட்டி இருக்கு..... நம்ம பசங்க அதுக்காகவே இருப்பாங்கப்பா..


 பலருக்கு அதுதான் சொகுசு வண்டி...பலருக்கு அது மவுசான வண்டியும் கூட.....

கள்ளன்களுக்கு அது சொர்க்கபுரி.... பெண்கள் (”த” னாக்களுக்கு) கொசுவண்டி....
“சி” க்களுக்கு.... தள்ளுவண்டி... இல்லாட்டி தள்ளிட்டு போற வண்டி....

பலர் அங்கு கொடுக்காத பொருட்களும் இல்லை... பலருக்கு அடிபடாத இடங்களும் இல்லை...

சிலர் வித்தௌட்டுல போகவே அதுல ஏறுறவங்க இருக்காங்க...
காசகுடுத்துட்டு.. மிச்சம் வேண்டாம கஷ்டப்பட்டவங்ளும் இருக்காங்க.....

255 கவனம் !!!!!!!!!!!!!!

Friday, April 16, 2010

அவள்.....







கண்களின் கண்ணீர் காயமுன்...

இதயத்தை கீறினாய்..

 இரத்தம் காயாதடி.... 

உயிர் துறக்கும் வரை !!!

comment

LinkWithin

Related Posts with Thumbnails