Thursday, April 22, 2010

அணை

மழைக்காலம்..அந்தி சாய்ந்த நேரம்...
அலுப்போடு உறங்கினேன் கட்டிலில்..
காரணம் நான் நடந்து வந்த தூரம்......
கவனிக்கவில்லை உன்னை என் அருகினில்

என் கை உன்னை தொட்டபோது 
மென்மையை உணர்ந்தேன்... 
அன்றய கூதலினால் உஷ்ணத்தை விரும்பியது 
உன்மேல் காதலினால் என்னுடல் உன்னை தழுவியது..

நான் நித்திரை கொள்ளவில்லை உண்மை தெரியவில்லை 
இறுக்கி அணைத்துக்கொண்டேன் நீ ஏதும் பேசவில்லை
மூச்சும் இல்லை உனது பேச்சும் இல்லை...
நான் எல்லை இன்றி தொல்லை செய்த போதும்..
உன்னிடம் இருந்து எதிர்ப்பேதும் இல்லை....

கட்டியணைத்தேன்.... முத்தமிட்டேன்.....ஏற்றுக்கொண்டாய்
எட்டி உதைந்தேன்.... ஏறிமிதித்தேன்.... பொறுத்துக்கொண்டாய்..
உனது மனம் மிகவும் மென்மையானது.. உனது பஞ்சான மேனியை போல்...
எத்தனை கொடூரங்கள் செய்தேன்.இனிமேல் முடியாது என்னால்

இரவு முழுதும் எனக்கும் உனக்கும் எத்தனை சண்டைகள்
காலையில் எழுந்தேன் கண்கள் திறக்கவில்லை....
அம்மா வந்தார் ”என்னடா இது கோலம்....படுத்தியிருக்கபாட்ட பார் . ”
பாவம் எனது காலிடுக்கில் மாட்டிக்கொண்டிருந்த தலையணையை நோக்கி.!







7 comments:

  1. நான் உன் பின்னாடி
    நீ என் முன்னாடி
    அன்பே நீதான் என் உயிர் நாடி

    அன்றைக்கு பாடினான் ஒருவன்
    “அந்தச் சாலையில் நீ வந்து சேராமல்..ஆறு டிகிரியில் என் பார்வை சாயாமல்...விலகிப் போயிருந்தால் தொல்லை இல்லை”

    இன்று வாடுகிறேன் நான்
    பார்த்து விட்டேன் உன்னை
    360 டிகிரியில்..
    வந்து விட்டது ஃபீவர் எனக்கும்
    108 டிகிரியில்...

    ReplyDelete
  2. இப்பிடி இல்ல Bruce...

    நான் உன் முன்னாடி
    நீ என் பின்னாடி
    அன்பே நீதான் என் உயிர் நாடி................

    ReplyDelete
  3. இதை எழிலிடம் கேட்டால் தெரியும்....

    ReplyDelete
  4. அண்ணே நான் என்னத்தை சொல்லுறது செய்யிறது நீங்கள் அதுக்கு நாங்கள் எடுபுடி நீங்க சொன்னால் சரிதான் ......................
    ஆனாலும் அண்ணே நீங்க கவிதையில கடைசியில அப்பிடியே உல்டா பன்னீட்டீங்க நானும் என்னவோ ஏதோ எண்டு வாசிக்க கடசியாய் தலகாணி எண்டு முடிச்சு எண்ட வயித்தில பச்சத்தண்ணியத்தான் வாத்திங்க ................நீங்க ரொம்ப குசும்புக்கார அண்ணே .........................

    ReplyDelete
  5. அண்ணே...... சாச்சுப்புட்டிங்க...............

    ReplyDelete
  6. என்னால முடியல

    ReplyDelete
  7. ஆக நீங்க யாரும் தூங்கிறது இல்ல....

    ReplyDelete

comment

LinkWithin

Related Posts with Thumbnails