Tuesday, April 27, 2010
தாக்குதல்
மூன்று நாட்களாக எனக்கு சரியான தூக்கம் இல்லை. காலையில் எழும்பி பார்த்தால் முகம் கை கால் உடம்பெல்லாம் காயங்கள்.... தழும்புகள்.என்னால் முடியவில்லை....யாரோ என்னை தாக்கி விட்டு தப்பிச்சு போறாங்கள்.... என்ன வென்றே ஊகிக்கவே முடியவில்லை.யார் என்டும் தெரியல......
நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்.. எனது வாழ்கை பிளேஷ்பெக்கை அப்பிடியே திருப்பினேன்.....
நொய்.........
........................
ஒரு வேளை அவனா இருக்குமோ..... ஆமா அவன் தான்... அவன்ட பெயர்ட முதல் எழுத்து “கு” , கடைசி எழுத்து “ரு” ... மொத்தம் 2 எழுத்து பெயர்... அன்டைக்கு அவன்ட வீட்ட போய் சொக்கலட்ட களவாடி திண்டதுக்காகத்தான் இப்பிடி செய்திருக்கனும்....ஒன்டா இரண்டா.... முழுசயும் அல்லோ.... சீ சீ... அவனுக்கு அப்படி தைரியம் வராது....சின்னப்பயபுள்ள....
கத்திய கண்டாலே கத்துறவன்....
அப்ப இவனா இருக்குமோ? கரிஈசன் .. அன்டைக்கு அவனுக்கு செய்த வேலைக்குதான் இப்பிடி செய்திருக்கனும்.... அவன்ட Face book ல.... ச்சே... அவனுக்கு அவன கண்டாலே பயம்.... பிறகு எப்புஎ என்ட பக்கம்??? வர மாட்டான்.
சில வேலை எங்கட கம்பஸ் பிள்ளைகளா இருக்குமோ.. அதுகளுக்கு செய்ற அநியாயத்துக்கு அதுகள் தான் பழி வாங்கி இருக்க வேண்டும்.... பென்சில் கூராலத்தான் குத்தியிருக்க வேண்டும்... எப்பவும் அதுகள் தங்களுக்கு என்டு வச்சிருக்கிற ஆயுதம் பென்சிலும் , வட்டவாரியும் தானே.....
அன்டைக்கு அந்த ஆ.வா வுக்கு நான் கடுமையா மொக்கை போட்டுட்டன்... அவள்தான் இப்படி குத்தியிருக்க வேணும்.. முகம் , கை , கால் எல்லா இடமும்.. படு பாவி... ஈவு இரக்கமே அவளுக்கு இல்லையா??..... ஆனா அவள் பூனை என்டாலே கண்டீன் அலற கத்துறவள்....ம்..... அவளாகவும் இருக்காது...
அப்ப மட்டவள்..... மங்களம்ஸ் ஆகத்தான் இருக்க வேண்டும்....... அவளுக்கு அடிக்காத நக்கலா... இல்ல அவள் எங்களுக்கு ஏசாத பேச்சா ?? அதுக்காக அவள் இப்பிடி பழிவாங்குவாள் என்டு நினைக்கல... நயவஞ்சகி ....நல்லவ.............என்டு நம்பினது தப்பாயிட்டு.. அப்பவே அம்மா சொன்னவ....
சீறும் பாம்பையாவது நம்பலாம்... ஆனா சிரிக்கிற பொம்பளங்கள நம்மாதடா என்டு... அப்பவே நான் கேட்டு இருக்கனும்.... மனசுல கொஞ்சமாவது ஈரம்மிருக்கா....மனிதாபிமானம் இல்லாம் இரத்தம் வர்ற அளவுக்கு குத்தியிருக்காளே.... படு பாதகி.... இவள் கட்டாயம் பென்சிலாதான் குத்தியிருக்க வேண்டும்... எப்பவும் பென்சிலும் கையுமா திரியக்குள்ளவே நான் சுதாகரிச்சிருக்க வேண்டும்....... இருந்தாலும் அவளுக்கு அவ்வளவு தைரியம் இருக்காது.. அவளுக்கு வெறும் சீன் மட்டும் தான் போடதெரியும்.... சீரியஸா எதுவும் செய்ய மாட்டா....
ஆமாம் .....ஆமாம்.... ஆள பிடிச்சுட்டன் நம்ம இடியமீனாகத்தான் இருக்க வேண்டும்.... அவன் பாக்கிற பார்வையே சரியில்ல.... கொலைவெறியோட தான் பாக்கிறவன்... ஆனா.. அவன் இங்க வந்தா ... அவன்ட கப்பு அவன காட்டி குடுத்திருக்குமே.......அவனாவும் இருக்க முடியாது..
நம்மட கட்டை.... சீ சீ.... அவனுக்கு என்ட கட்டில் எட்டியிருக்காது... ஆகவே அவனும் இல்ல....
இல்லாட்டி.. எங்க உயர்ந்த மனிதர்.. சே - - ன். இருக்கும் ... இருக்கும்.. அன்டைக்கு அவன்ட வீட்ட போய் வீட்ட நாசம் பண்ணினதும் இல்லாம... அவன அவன்ட அம்மாக்கு முன்னாலயே கட்டிபோட்டு அடிச்சத.... நெஞ்சில, நஞ்சா வெச்சு செய்திருப்பான்... அந்த நயவஞ்சகன்....
ஆனா அவனுக்கு வதையன் என்னா பயம் ( (வேதநாயகம் என்னா பயம் வேட்டக்காரன் படத்துல வந்த பாணியில்)!!!!!! அப்ப அவனும் இல்ல..
அப்ப எங்கட J.K குட்டி... அவன் சைவம்... இரத்தம் பாக்காதவன்... அவன் ஒன்லி இறைச்சி....
அப்ப யாரா இருக்கும் ... என்ன ரூம் மேட்... இருக்காது.... என்னை அடேக் பண்ணிவன் அவனையும் அல்லோ லைட்டா அடேக் பண்ணிட்டான்...
அதுக்குள்ள என்ட...சகபாடி “மச்சான் இந்த ஏறியால குடுக்காரன் திரியிறவங்கடா.... அவன் nice knife எல்லாம் வச்சுருக்கான் மச்சான் ... அவன்ட வேலை தான் இது...”
ஆனா வந்தவன் ஏன் என்ன தாக்க வேண்டும்... அவனுக்கு தேவையானத அவன் எடுத்தல்லவா பழக்கம்....
சரி.... சந்தேகப்பட்டது போதும்... நாளைக்கும் அவன் வருவான்... நானும் எனது நண்பனும் சேர்ந்து சீரியஸா பிளேன் போட்டம்..... இதான் அந்த பிளான்.....
?????????????????????????????????????????????????????????????????
????????????????????????????????????????????????????????????????????
???????????????????????????????????????????????????????????????????????
????????????????????????????????????????????????????????????????????????????(என்னன்டு பாக்கிறீங்களா.......Plan is very very....... (அதான்பா... டாப் சீக்கிரட்டு) secret .. அதாங்க உங்க கண்ணுக்கு தெரியல....)
....
........
...........
..............
................
அடுத்தநாள் இரவு...... அனைத்து ஆயுதங்களும் சரி... எனது தலையணைக்கு பக்கத்துல வீச்சரிவாள்......வந்தா ஒரே வெட்டு.....
புருஸ்ட கட்டிலுக்கடில அலவாங்கு.... அந்த தேவாங்குட தோலை கிழிச்சு தொங்கவிடுற அளவுக்கு ஆயத்தம் எல்லாம் சரி....
நான் தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டேன்.... அணைத்து லைட்டும் ஃஓப் பண்ணயாச்சு.... எனது உடல் அசைவற்று கிடந்தது.....அவனது வருகையை எதிர்பார்த்து இருந்தோம்..... ஆம் அவன் வருவது போல் இருந்தது....
ஆம் வந்துவிட்டான் எனது ரூமுக்குள் நுளைந்து விட்டான்... எனக்கு உள்ளூர பயம் இருந்தாலும்.... மாத்தள மாரியம்மனை நினைச்சு கொண்டு தைரியத்த கொஞ்சம் கடன் வாங்கி....எனது ஒரு கை வீச்சரிவாளை எடுக்க தயாரான போது..தான் மூளை சொன்னது.. அவன் அலர்ட் ஆயிடுவன் .....அதால் அவன அடிச்சு வீழ்த்தி பொலிஸிடம் குடுப்பம் என்டு.... சரி..ஓகே... அவன் எனக்கருகில் வந்துட்டான்..... நான் சந்தர்ப்பத்தை காத்துக்கொண்டுறிக்கிறேன்.... அவன் என்னை சுத்தி சுத்தி எதையோ தேடுறான்..
அங்கு போறான் எனது உடுப்பில் ஏதோ தேடுறான் ... காசாக இருக்குமா ????
மறுபடியும் வருகிறான்.... என் நண்பன் அருகில் சென்று அவனை பரிசோதிக்கிறான்.... அவனுக்கு பேதி புடுங்கியிருக்கும்... வேர்த்து கொட்டுது....
மறுபடியும் என்னிடம்....என் காலடியில்.... அப்படியே என்நெஞ்சருகில்......... இடைக்கிடையில எனக்கு கிச்சு மூச்சு வேற செய்றனா்.. என்னால் முடில.... கடைசியா எனது காதறுகே வந்துட்டான் .... ஆம்... இதுதான் சரியான சந்தர்ப்பம் விட்டேன் ஒரு அடி......
ஐயோ !!!!!!!!!!!!!!! பாவம் செத்துவிட்டது அந்த நுளம்பு... !!!!
பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.... !!! உங்களை அறுப்பதற்கல்ல.... என்னை திருத்துவதற்கு !!!!
Subscribe to:
Post Comments (Atom)
//நம்மட கட்டை.... சீ சீ.... அவனுக்கு என்ட கட்டில் எட்டியிருக்காது... ஆகவே அவனும் இல்ல....//
ReplyDelete//அப்ப எங்கட J.K குட்டி... அவன் சைவம்... இரத்தம் பாக்காதவன்... அவன் ஒன்லி இறைச்சி...//.
//அப்ப யாரா இருக்கும் ... என்ன ரூம் மேட்... இருக்காது.... என்னை அடேக் பண்ணிவன் அவனையும் அல்லோ லைட்டா அடேக் பண்ணிட்டான்...//
எல்லாம் ரொம்ப நல்லாய் இருந்துது .....
அண்ணே இந்த நுளம்பை அடிச்சிட்டீங்கள் .......
நீங்க மேலே சந்தேகப்பட்ட நுளம்புகள் உங்களை அட்டாக் பண்ணக் கூடும் be carefullllllll............
ம்.. அது சரி.. எழில்.......
ReplyDeleteஇனி மேல் ரொம்ப கவனமா இருக்கனும்...
அடேக்கிங் இனிமேல் கூடலாம்.... இன்டைக்கே போய் நுளம்பு வலை வாங்கனும்...... நுளம்பு கொயில் வாங்கனும்...... மோர்டின் ஸ்பிரயர் வாங்கனும்....
அண்ணே இவளவும் அதுகளுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி ......
ReplyDeleteநீங்க கொஞ்ச நாளைக்கு தலை மறைவாய் இருக்கிறதுதான் நல்லது........
hahaa...nice one
ReplyDeleteThnx ... sister !!!
ReplyDeletemmm sema interesting James Bond story,,,
ReplyDeletehehee...yep.. r8 sis..:P
ReplyDeletenice da nanbA
ReplyDelete