Friday, March 5, 2010

நடந்தது என்ன ?? பாகம் -2


இனிதாங்க மெயில் மெட்டருக்கே கதை வருகுது........



வெள்ளவத்தையில பொடியல் ரோட்டைய நாறடிக்கக்குள்ள.... அங்கதான் கிளம்பினது பூகம்பம்...திடீர் என்று சிங்கள குரல்....‘‘மே.. ஒக்கம கட்டிய என்ன..... கட்டிய கீயத ???
எக்காய்... தெக்காய்........................................... அட்டாய்.‘‘ என்டு அவன் பாட்டுக்கு எண்ணிக்கொண்டிருந்தான்..... திடீர் என்டு எங்கட குரூப்ல இருந்து ஒரு சிங்களத்தில உயர்ந்த மனிதர்.... (அவர் மனதால மட்டும் தான் உயர்ந்தவர்.... உயரத்தில் இல்ல... ) ‘‘அய்யே... அடாய் , நே நமயாய்......‘‘ என்டு தன்னையும் சேர்க்கு மாறு காலில் விழாத குறையாக வேண்டுகோள்.......... சரி இதென்ன கரைச்சலா போய்ட்டு என்டு சரிப்பா...நம்மடஐ.சி யை வேண்டி பார்த்தான்.

(... அதுக்குள்ள பனைல இருந்து விழுந்தவன மாடேறி மிதிச்சது போல நம்மட கம்பஸ்ல படிக்கிற பிள்ள ஒன்னு.. (இசைக்கும் அவக்கும் சம்பந்தம் ரொம்ப துாரம் இல்ல) அதால வந்தவ இத பாத்துட்டா......அந்த பிள்ளைக்கு முதல்லேயே நம்மள பற்றி தெரியும்... ஆனா இவ்வளவு கேவலப்படுவாங்க என்டு அந்த பிள்ளை நினைச்சிருக்குமோ என்னவோ........... இவ்வளவு காலமா ரோட்டுக்கே வராத அந்த பிள்ள ஏன்தான் இன்டைக்கு என்டு பாத்து வந்ததோ ???  (என்னடா எப்பிடி இவ்வளவு காலமா  அவ ரோட்டுக்கு வரல்ல என்டு எங்களுக்கு தெரியுமா என்டு பாக்கிறீங்களா.. அதானே நான் முதல்ல சொன்னான் நம்மட பொடியங்களுக்கு, அவங்க வீட்ட கூட்டுறது யார் என்டு தெரியுமோ தெரியல.. ஆனா வெள்ளவத்த ரோட்ட கூட்டுறவ தொடக்கம்.....   வெள்ளவத்தயில கூட்டுறவு கடை இருக்கிற வரைக்கும் அத்துப்படி)  முதல்லேயே நம்மட சீத்துவன் ஊர் அறிஞ்சது... இனி கம்பஸ்ல வேற நாறனுமா?? என்னத்த பண்ணுற..................... அதுதான் எல்லாம் முடிஞ்சே, இனி அவள்ட கால்ல கைல வழுந்தாவது விஷயத்த மறைக்னும் என்டு எண்ணிகொண்டு இருக்ககுள்ள......)

ஐசிய பாத்தவன் ....நீயும் வாடா என்டு(உயர்ந்தவனையும் எங்களுடன்)... கூட்டிட்டு போய்ட்டான் ...... என்ன எங்க என்டு பாக்கிறீங்களா ?
வேறங்க மாமியார் வீட்டதான்...... அப்பிடியே நம்மட உயர்ந்த மனிதர் முகத்தில ஒரே சிரிப்பு......... (நானும் ஜெயிலுக்கு போறன் ஜெயிலுக்கு போறன் ஜெயிலுக்கு போறன்........... பார்த்துக்குங்க நானும் ரௌடிதான்..........) என்டநினைப்பில... அவர் வெளிக்கிட்டேர்.... ஏதோ ட்ரிப் போற போல..................


வெள்ளவத்தை சனத்துக்கு ஒரே சந்தோசம்.... ரோட்டுல நிண்டு வாகனத்துக்கு மட்டும் இல்ல..... போற வாற சனத்துக்கும்.... வதைக்கிற பொடியல் பிடிபட்டுட்டாங்க என்டு அதுக்குள்ள ஒரு மனுசி... இவங்கதான் பிடிச்சுட்டு போங்க பிடிச்சுட்டு போங்க என்டு பொலிஸ்ட அறிக்க வேற....... ஆனா எங்கட பொடியங்கள்.... நோ கெயார் எபௌட் இட்....ஏதோ பொலிஸ்ல பிடி பட்டா பெரிய கௌரவம் என்டு .... இறுமாப்போட நடக்குறாங்கள்..... அது சரி இங்க பிடிபட்டவங்கள் யார் என்டு நான் இன்னும் சொல்லலயே.... அதான் முதல்ல சொன்ன மாதிரி நம்மட உயர்ந்த மனிதர்... கம்பஸ்ல கொம்பியூட்டர் கலட்டிப்பூட்டுறவங்க 4 பேர்.... அவங்க பயங்கர கறுப்பா இல்லாட்டியும் , கறுப்பா பயங்கரமா இருப்பாங்க.... பிறகு மண்னை கொத்துறவன் ஒருவன்... மண்ணை அளக்கிறவங்க 2 பேர் முக்கிய புள்ளி..... இந்த சிப், நெட்வேர்க் கணக்சன் எல்லாம் செய்வாங்க..... அங்க படிக்கிறவன்... நல்லவிளையாட்டு காரன் என்டு கொண்டு கை கால் எல்லாம் காயமா திரிவான்.. ஏன்டா என்டு கேட்டா , அப்பதான்டா நான் விளையாடுவன் என்டு நம்புறாங்க என்டு தன்ட மனக்கவலைய என்னட மட்டும் ரகசியமா சொல்லுவான்.......அதோ அவன் சிரிப்பான் ஆனா சிரிக்க மாட்டான்... இவ்வளவு பேர்தாங்க.... அண்டைக்கு வெள்ளவத்தைய கலக்கினது........


சரி வாடா வந்ததுதான் வந்துட்டம் பொலிஸ்டேசன சுத்திபாத்துட்டு வருவம் என்டு.... பொலிஸ் டேசனை சுத்தினா......அங்க எங்கள ஒரு ரூம்ல கூட்டிட்டு போய் அடிப்பான் என்டு பார்த்தா................. நீங்க யாரு என்டு கேக்கிறான்.........
அட பரதேசி பயலே.. இத அந்த ரோட்ல வச்சு கேட்டிருந்தாலே சொல்லிருப்பமேடா.... ஏன்டா அத இங்க வச்சு கேக்குறா..... ஏதொ நாங்க பம் வைக்க வந்தமாதிரி விசாரனை...... நீங்க யாரு யாரு யாரு ????? என்ன செய்றீங்க செய்றீங்க செய்றீங்க.. ஏன் இங்க நின்டீங்க நின்டீங்க ???? (பாட்ஷா படத்துல ரஜனிட்ட அவர்ர தம்மி கேள்வி கேக்கிற மாதிரி....).

இன்னும் அவனுக்கு விளங்களல்ல நாங்கெல்லாம் டம்மி பீஸ் என்டு..... அதுக்குள்ள நம்மட ஒருவன் (நம்மட உயர்ந்த மனிதரை விட சற்று உயரமானவர்... ச--) “ டேய் நாமலும் ரௌடி...(வடிவேல்ட பாணில)” இவங்களுக்கு ரணகலத்திலயும் கிலுகிலுப்பு வேண்டி கிடக்கு. பிறகு தான் பார்த்தா யாரோ ரமேஸ்ஸாம் அவனை பற்றி யாரோ கம்லைன் குடுத்துறுக்காங்க... யார் இங்க ரமேஸ் என்டு கேட்டான்......... (நாங்க எந்த கேள்விக்கு தெரியும் என்டு பதில் சொல்லி இருக்கம்.... பள்ளிக்கூடத்துல இருந்து கம்பஸ் வரை ”தெரியாது” என்பதை விட வேற எங்களுக்கும் எதுவும் தெரியாது...
நம்புங்கப்பா ....)
அவன் எவ்வளவு தான் கேட்டு பார்த்தான் நாங்க சொல்லவே இல்ல...... ஏன்னா எங்களுக்கு உண்மையில அவன தெரியாது.......
அப்பதான் எனக்கு காமடி ஒன்டு ஞாபகம் வந்தது.... “சேர் உங்க ஜட்ச்மென்டு ரொம்ப தப்பு.. எங்கட மூஞ்சிய இரண்டு தடவை உத்து பாருங்க வீட்ட போய் தனியா இருந்து கக்கபேக்க கக்கபேக்க என்டு சிரிப்பிங்க சேர்....... நம்ம ஜட்ச்மென்டு தான் கரக்டு(click here)“ சரிடா என்டு எங்கட ஐசி ய திருப்பி தரும் போது... எந்த எந்த இடம், எந்த இடம் என்டு பார்த்துக்கொண்டு வரக்குள்ள.. அதுல ஒருவன், நம்மட பொடியன் ஒருவன்ட ஊர பாத்துட்டு.... ‘‘காகெதெ மேக ஐசி...”............ அவன் “மகே ஐயே...” என்டவன் அவனும் அந்த ஊர்ல வேலை செய்தவனாம் என்டு விஷயத்த நோண்ட ஆரம்பிச்சிட்டான்... சப்பப்பா........மறுபடியும் முதல்ல இருந்தா.... முடியல்ல... பொடியங்களுக்கு ஒரே கடுப்பு.... டேய் உன்ட ஊர் பிரச்சனைய ஊர்ல் வைக்க வேண்டியது தானே.. என்டு , சரி .. அப்படி இப்படி என்டு ஒரு மாதிரி வெளில விட்டான்............... என்ன மச்சான் இவங்கள் டக்கண்டு விட்டுட்டாங்க என்டு நம்மட கம்பியுட்டர் பொடியனுக்கு கவலை வேற.... வெளில போகக்குள்ள ஏதோ கம்பஸ்ல கொன்வேகேசன் முடிஞ்சு போற மாதிரி நினைப்பு......

போனவங்கள்.. பயந்து வீட்ட போவாங்கள் என்டு பார்த்தா... மச்சான் அடுத்த எங்கடா மீட்டிங்.......(இவங்க திருந்தமாட்டாங்கள்....) . முற்றும் .


நான் இதுக்கு புதுசு... சில என்ன , பல பிழைகள் இருக்கு பிழைகளை சுட்டுக....

7 comments:

  1. வதையன் அண்ணே!!! வதையன் அண்ணே!!!! உங்களுட்ட ஒரு விஷயம் கேட்கவேணும்
    நீங்கள் எப்பாச்சும் உந்த போலீசோ கிலீசோ (வைக்குலையே நுளையதாம் )
    அவங்களுட்ட மாட்டுப்பட்டநின்களோ ?????????????(நீங்க நல்லபிள்ளைதான் இருந்தாலும் ஒரு டவுட் தான்)
    அவங்கள் எப்பிடியண்ண ட்ரீட் பனுவினும்.கொஞ்சம் சொல்லமாட்டிங்களே ப்ளீஸ்...............
    போனவங்கள் எல்லாம் அதை(போலீஸ் ஸ்டேஷன் ) நல்லா அவங்க மயிண்டயின் பண்ணுறாங்கள் எண்டு சொல்லிச்சினம் அப்பிடியோண்ணை...........
    நல்ல சாப்பாடு எல்லாம் தருவாங்களாம் நல்ல ருசியாம் அண்ணை!!!!!!!!!!!!!! கொஞ்சம் போனவையை கேட்டு சொல்லமாட்டிங்களே..........
    நீங்க எப்பாச்சும்போன தம்பியையும் மறக்காம கூப்பிடுங்க (நான் உங்குட செல்லத் தம்பியல்லே ).தம்பியும் ஒரே நாளைக்கு நல்ல சாப்பாடு சாபிடலாம் ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் .

    ReplyDelete
  2. தம்பி நீ சொன்ன உடனே உடம்பெல்லாம் கிலுகிலுத்து போய்ட்டு.....
    உன்ட first Attack ஏ எனக்கு ஹார்ட் அடேக்காக்கிடும் போல இருக்கு.....

    நீயும் அன்டைக்கு போயிருந்தா நல்லா இருக்கும் என்டு நினைக்கிறன்.. ஓசி சாப்பாட்டுக்காக நீங்க பொலிஸ் டேசன் போகனும் என்டு இல்லப்பா.............. வெள்ளவத்தயில இருக்கிற மாணிக்க பிள்ளையார் கோவிலயே அன்னதானம் குடுக்கிறவங்கப்பா......

    இருந்தாலும் நீ ஆசைப்படுறா என்றதால.... மட்ட பொடியங்கல கேட்டு சொல்லுறன்.... என்ன நான் சொல்றது.......

    ஓசி என்டா ஒயில் அடிப்பாங்க என்டு கேள்விபட்டுறுக்கிறன் .... அதுக்காக இப்படி ஜெயிலுக்கு போக ஆசை படுவாங்க என்டு கனவிலும் நினைக்கலப்பா.... எப்பிடியும் உன்ட ஆசை நிறைவேற நான் இறைவனை வேண்டுகிறேன்.......

    ReplyDelete
  3. superp man.................. 5n
    தம்பி இப்பிடி உள் வீட்டு இரகசியம் எல்லாத்தையும் அம்பலப் படுத்தப்படாது........
    எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடக்கி வாசிக்கணும்........ தொழில் ரகசியம் road க்கு வந்ந்துடும் எல்லே.............................

    ReplyDelete
  4. என்ன தான் என்டாலும் Road க்கு வந்தத.... எப்படியண்ணே....அடக்கிறது...

    அதுதான் வெள்ளவத்தையே.. சுத்தி நின்னு பாத்துச்சே.. அண்ணே....

    ReplyDelete
  5. Supper vahee....... Continue continue......

    ReplyDelete
  6. அண்ணை இவங்கள் வீட்டில வேலை வெட்டி இல்லாமல் திரீராங்கள். அதிலையும் ஒருதன் கம்பஸ் வரமாட்டான் ஆனால் வெள்ளவத்தைக்கு பஜார் அடிக்க வந்துடுவானாம் என்டு சொல்லுறாங்கள். இவனுக்கு அடிக்கடி சேட் பட்டின் அறுந்துடும். 12 மனிக்கு எல்லாம் தொல்லைபேசி கதைக்கிறானம். அதிலயும் ஒருதன் 153 தான் உயரம். ஆனால் தன்ன விட வளர்ந்த மண் பிள்ளைகளுக்கு(பெண் பிள்ளை) கண் அடிக்கிறானாம் என்டு சொல்லுறாங்கள். அன்டைக்கு வராத வளர்ந்த பெடியன் மண் பிள்ளைகளை பார்க்கிரதுக்காகவே சொய்சாபுரத்தில இருந்து வெள்ளவத்தை வந்துட்டானாம். அவன் இப்ப பேஸ் புக் இல கவிதை வேற கிறுக்க தொடங்கீற்றானாம். தனக்கும் காதல் வந்துட்டுதாம் என்டு தானே சொல்லுறான். ம...... என்டு இன்னொருத்தன் வெள்ளவத்தையில இருக்கிற எல்லா மண்பிள்ளைகளும் தனக்குத்தான் என்ட நினைப்பு. யாரேன் சோடியா போனா அவனுக்கு பிடிக்காது உடனே நக்கல். பி........ என்டு ஒருதன் இரவில 3 மணி வரைக்கும் ஏதோ படம் பார்க்கிறானாம். என்ன என்டு கேட்டா வெட்க்கப்படுறான்.இவங்களை என்ன செய்யிரீங்கள் என்டு கேட்டா தாங்க இஞ்சினியர் என்டு சொல்லுறாங்கள்.இவங்களை எல்லாம் வைத்து கம்பஸ் இல படிப்பீக்கிறாங்கள் தானே அண்ணை. இவங்களை பொலிஸ் உள்ள வைச்சுஇருக்கனும் அண்ணை. நீங்கள் இப்பிடி இல்லத்தானே அண்ணை................

    ReplyDelete
  7. ஓமடா தம்பி...உவங்களை உள்ள போட்டு மிதிக்கத்தான் வேண்டும்....அதிலயும் தம்பி அந்தப் பெடியன்...அதானடாப்பா அந்த ஊமைக்குசும்பன் குளத்தடிப் பெடியனை விட்டுட்டியலே...அவன்ட தொல்லை இங்க தாங்கமுடியலடாப்பா...எப்ப பாத்தாலும் போன்தான்...இரவுல நெட்டுக்கு வாரான் என்டு பேர்தான்...ஆனா ஆளைக் காணேல்ல, கேட்டா நெட்டுல நுளம்பு சிக்கிட்டாம், அதால நெட்டு ஸ்லோ வாகுதாம் என்டு என்னட்டயே கதை விடுறான் பெடியன்...ஆனா எங்கன்ட சிபிபி அண்ணை விட்டுத் துளாவி கண்டு பிடிச்சதன்படி அவர்ட கம்பியூட்டர்ல சில பெண்டுகள்ட கணக்குலதான் தெரியிராராம்....கேட்டால் ”நான் அவன் இல்ல” என்டுரார்...அண்ணை மட்ச்சுல அடிக்கிறதுல தான் வென்டவர் என்டால்...அண்ணை வெடிக்கிறதுலயும் பெரிய ஆள்தான்...கம்பஸ்ல அவனவன் சரக்கு கிடந்தும் சும்மா கிடக்கக்குல இவர் மாத்திரம் ஏதோ சரக்கு விட்டுட்டுப் போன மாதிரி படம் காட்டிக் கொண்டிருப்பாரு...கேட்டா தலையிடிக்கிதாமாம்....அண்ணை...உங்களத்தான்.....வதையன் அண்ணை இவரயும் கொஞ்சம் வதையுங்களேன்...

    ReplyDelete

comment

LinkWithin

Related Posts with Thumbnails