Tuesday, April 27, 2010

தாக்குதல்







மூன்று நாட்களாக எனக்கு சரியான தூக்கம் இல்லை. காலையில் எழும்பி பார்த்தால் முகம் கை கால் உடம்பெல்லாம் காயங்கள்.... தழும்புகள்.என்னால் முடியவில்லை....யாரோ என்னை தாக்கி விட்டு தப்பிச்சு போறாங்கள்.... என்ன வென்றே ஊகிக்கவே முடியவில்லை.யார் என்டும் தெரியல......

நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்.. எனது வாழ்கை பிளேஷ்பெக்கை அப்பிடியே திருப்பினேன்.....
நொய்.........
........................


ஒரு வேளை அவனா இருக்குமோ..... ஆமா அவன் தான்... அவன்ட பெயர்ட முதல் எழுத்து “கு” , கடைசி எழுத்து “ரு” ... மொத்தம் 2 எழுத்து பெயர்... அன்டைக்கு அவன்ட வீட்ட போய் சொக்கலட்ட களவாடி திண்டதுக்காகத்தான் இப்பிடி செய்திருக்கனும்....ஒன்டா இரண்டா.... முழுசயும் அல்லோ.... சீ சீ... அவனுக்கு அப்படி தைரியம் வராது....சின்னப்பயபுள்ள....
கத்திய கண்டாலே கத்துறவன்....


அப்ப இவனா இருக்குமோ?  கரிஈசன் .. அன்டைக்கு அவனுக்கு செய்த வேலைக்குதான் இப்பிடி செய்திருக்கனும்.... அவன்ட Face book ல....  ச்சே... அவனுக்கு அவன கண்டாலே பயம்.... பிறகு எப்புஎ என்ட பக்கம்???  வர மாட்டான்.


சில வேலை எங்கட கம்பஸ் பிள்ளைகளா இருக்குமோ.. அதுகளுக்கு செய்ற அநியாயத்துக்கு அதுகள் தான் பழி வாங்கி இருக்க வேண்டும்.... பென்சில் கூராலத்தான் குத்தியிருக்க வேண்டும்... எப்பவும் அதுகள் தங்களுக்கு என்டு வச்சிருக்கிற ஆயுதம் பென்சிலும் , வட்டவாரியும் தானே.....


 அன்டைக்கு அந்த ஆ.வா வுக்கு நான் கடுமையா மொக்கை போட்டுட்டன்... அவள்தான் இப்படி குத்தியிருக்க வேணும்.. முகம் , கை , கால் எல்லா இடமும்.. படு பாவி... ஈவு இரக்கமே அவளுக்கு இல்லையா??..... ஆனா அவள் பூனை என்டாலே கண்டீன் அலற கத்துறவள்....ம்..... அவளாகவும் இருக்காது...
அப்ப மட்டவள்.....  மங்களம்ஸ் ஆகத்தான் இருக்க வேண்டும்....... அவளுக்கு அடிக்காத நக்கலா... இல்ல அவள் எங்களுக்கு ஏசாத பேச்சா ?? அதுக்காக அவள் இப்பிடி பழிவாங்குவாள் என்டு நினைக்கல... நயவஞ்சகி ....நல்லவ.............என்டு நம்பினது தப்பாயிட்டு.. அப்பவே அம்மா சொன்னவ....


சீறும் பாம்பையாவது நம்பலாம்... ஆனா சிரிக்கிற பொம்பளங்கள நம்மாதடா என்டு... அப்பவே நான் கேட்டு இருக்கனும்.... மனசுல கொஞ்சமாவது ஈரம்மிருக்கா....மனிதாபிமானம் இல்லாம் இரத்தம் வர்ற அளவுக்கு குத்தியிருக்காளே.... படு பாதகி.... இவள் கட்டாயம் பென்சிலாதான் குத்தியிருக்க வேண்டும்... எப்பவும் பென்சிலும் கையுமா திரியக்குள்ளவே நான் சுதாகரிச்சிருக்க வேண்டும்.......  இருந்தாலும் அவளுக்கு அவ்வளவு தைரியம் இருக்காது.. அவளுக்கு வெறும் சீன் மட்டும் தான் போடதெரியும்.... சீரியஸா எதுவும் செய்ய மாட்டா....



ஆமாம் .....ஆமாம்.... ஆள பிடிச்சுட்டன் நம்ம இடியமீனாகத்தான் இருக்க வேண்டும்.... அவன் பாக்கிற பார்வையே சரியில்ல.... கொலைவெறியோட தான் பாக்கிறவன்... ஆனா.. அவன் இங்க வந்தா ... அவன்ட கப்பு அவன காட்டி குடுத்திருக்குமே.......அவனாவும் இருக்க முடியாது..



நம்மட கட்டை.... சீ சீ.... அவனுக்கு என்ட கட்டில் எட்டியிருக்காது... ஆகவே அவனும் இல்ல....


இல்லாட்டி.. எங்க உயர்ந்த மனிதர்.. சே - - ன். இருக்கும் ... இருக்கும்.. அன்டைக்கு அவன்ட வீட்ட போய் வீட்ட நாசம் பண்ணினதும் இல்லாம... அவன அவன்ட அம்மாக்கு முன்னாலயே கட்டிபோட்டு அடிச்சத.... நெஞ்சில, நஞ்சா வெச்சு செய்திருப்பான்... அந்த நயவஞ்சகன்....
ஆனா அவனுக்கு வதையன் என்னா பயம் ( (வேதநாயகம் என்னா பயம் வேட்டக்காரன் படத்துல வந்த பாணியில்)!!!!!! அப்ப அவனும் இல்ல..


அப்ப எங்கட J.K  குட்டி... அவன் சைவம்... இரத்தம் பாக்காதவன்... அவன் ஒன்லி இறைச்சி....


அப்ப யாரா இருக்கும் ... என்ன ரூம் மேட்... இருக்காது.... என்னை அடேக் பண்ணிவன் அவனையும் அல்லோ லைட்டா அடேக் பண்ணிட்டான்...

அதுக்குள்ள என்ட...சகபாடி “மச்சான் இந்த ஏறியால குடுக்காரன் திரியிறவங்கடா.... அவன் nice knife எல்லாம் வச்சுருக்கான் மச்சான் ... அவன்ட வேலை தான் இது...”
ஆனா வந்தவன் ஏன் என்ன தாக்க வேண்டும்... அவனுக்கு தேவையானத அவன் எடுத்தல்லவா பழக்கம்....

சரி.... சந்தேகப்பட்டது போதும்... நாளைக்கும் அவன் வருவான்... நானும் எனது நண்பனும் சேர்ந்து சீரியஸா பிளேன் போட்டம்..... இதான் அந்த பிளான்.....
?????????????????????????????????????????????????????????????????
????????????????????????????????????????????????????????????????????
???????????????????????????????????????????????????????????????????????
????????????????????????????????????????????????????????????????????????????(என்னன்டு பாக்கிறீங்களா.......Plan is very very....... (அதான்பா... டாப் சீக்கிரட்டு) secret .. அதாங்க உங்க கண்ணுக்கு தெரியல....)
....
........
...........
..............
................
அடுத்தநாள் இரவு...... அனைத்து ஆயுதங்களும் சரி... எனது தலையணைக்கு பக்கத்துல வீச்சரிவாள்......வந்தா ஒரே வெட்டு.....
 புருஸ்ட கட்டிலுக்கடில அலவாங்கு.... அந்த தேவாங்குட தோலை கிழிச்சு தொங்கவிடுற அளவுக்கு ஆயத்தம் எல்லாம் சரி....
நான் தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டேன்.... அணைத்து லைட்டும் ஃஓப் பண்ணயாச்சு.... எனது உடல் அசைவற்று கிடந்தது.....அவனது வருகையை எதிர்பார்த்து இருந்தோம்..... ஆம் அவன் வருவது போல் இருந்தது....
ஆம் வந்துவிட்டான் எனது ரூமுக்குள் நுளைந்து விட்டான்...  எனக்கு உள்ளூர பயம் இருந்தாலும்.... மாத்தள மாரியம்மனை நினைச்சு கொண்டு தைரியத்த கொஞ்சம் கடன் வாங்கி....எனது ஒரு கை வீச்சரிவாளை எடுக்க தயாரான போது..தான் மூளை சொன்னது.. அவன் அலர்ட் ஆயிடுவன் .....அதால் அவன அடிச்சு வீழ்த்தி பொலிஸிடம் குடுப்பம் என்டு.... சரி..ஓகே... அவன் எனக்கருகில் வந்துட்டான்..... நான் சந்தர்ப்பத்தை காத்துக்கொண்டுறிக்கிறேன்.... அவன் என்னை சுத்தி சுத்தி எதையோ தேடுறான்..
அங்கு போறான் எனது உடுப்பில் ஏதோ தேடுறான் ... காசாக இருக்குமா ????
மறுபடியும் வருகிறான்.... என் நண்பன் அருகில் சென்று அவனை பரிசோதிக்கிறான்.... அவனுக்கு பேதி புடுங்கியிருக்கும்... வேர்த்து கொட்டுது....
மறுபடியும் என்னிடம்....என் காலடியில்.... அப்படியே என்நெஞ்சருகில்......... இடைக்கிடையில எனக்கு கிச்சு மூச்சு வேற செய்றனா்.. என்னால் முடில.... கடைசியா எனது காதறுகே வந்துட்டான் .... ஆம்... இதுதான் சரியான சந்தர்ப்பம் விட்டேன் ஒரு அடி......

 ஐயோ !!!!!!!!!!!!!!! பாவம் செத்துவிட்டது அந்த நுளம்பு... !!!!


பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்....  !!! உங்களை அறுப்பதற்கல்ல.... என்னை திருத்துவதற்கு !!!!

Thursday, April 22, 2010

அணை

மழைக்காலம்..அந்தி சாய்ந்த நேரம்...
அலுப்போடு உறங்கினேன் கட்டிலில்..
காரணம் நான் நடந்து வந்த தூரம்......
கவனிக்கவில்லை உன்னை என் அருகினில்

என் கை உன்னை தொட்டபோது 
மென்மையை உணர்ந்தேன்... 
அன்றய கூதலினால் உஷ்ணத்தை விரும்பியது 
உன்மேல் காதலினால் என்னுடல் உன்னை தழுவியது..

நான் நித்திரை கொள்ளவில்லை உண்மை தெரியவில்லை 
இறுக்கி அணைத்துக்கொண்டேன் நீ ஏதும் பேசவில்லை
மூச்சும் இல்லை உனது பேச்சும் இல்லை...
நான் எல்லை இன்றி தொல்லை செய்த போதும்..
உன்னிடம் இருந்து எதிர்ப்பேதும் இல்லை....

கட்டியணைத்தேன்.... முத்தமிட்டேன்.....ஏற்றுக்கொண்டாய்
எட்டி உதைந்தேன்.... ஏறிமிதித்தேன்.... பொறுத்துக்கொண்டாய்..
உனது மனம் மிகவும் மென்மையானது.. உனது பஞ்சான மேனியை போல்...
எத்தனை கொடூரங்கள் செய்தேன்.இனிமேல் முடியாது என்னால்

இரவு முழுதும் எனக்கும் உனக்கும் எத்தனை சண்டைகள்
காலையில் எழுந்தேன் கண்கள் திறக்கவில்லை....
அம்மா வந்தார் ”என்னடா இது கோலம்....படுத்தியிருக்கபாட்ட பார் . ”
பாவம் எனது காலிடுக்கில் மாட்டிக்கொண்டிருந்த தலையணையை நோக்கி.!







Monday, April 19, 2010

255 சிறு விபரணை..... கவனம்..



யாருக்கும் 255 என்டா “டக்” என்டு விளங்கும்.... ஏனென்றால்....  அந்த பஸ்ஸினுள் நிற்க கூட இடம் இல்லாட்டியும்.... பலர் அங்கு தொங்கிட்டு போவதற்கு கூடி போட்டி இருக்கு..... நம்ம பசங்க அதுக்காகவே இருப்பாங்கப்பா..


 பலருக்கு அதுதான் சொகுசு வண்டி...பலருக்கு அது மவுசான வண்டியும் கூட.....

கள்ளன்களுக்கு அது சொர்க்கபுரி.... பெண்கள் (”த” னாக்களுக்கு) கொசுவண்டி....
“சி” க்களுக்கு.... தள்ளுவண்டி... இல்லாட்டி தள்ளிட்டு போற வண்டி....

பலர் அங்கு கொடுக்காத பொருட்களும் இல்லை... பலருக்கு அடிபடாத இடங்களும் இல்லை...

சிலர் வித்தௌட்டுல போகவே அதுல ஏறுறவங்க இருக்காங்க...
காசகுடுத்துட்டு.. மிச்சம் வேண்டாம கஷ்டப்பட்டவங்ளும் இருக்காங்க.....

255 கவனம் !!!!!!!!!!!!!!

Friday, April 16, 2010

அவள்.....







கண்களின் கண்ணீர் காயமுன்...

இதயத்தை கீறினாய்..

 இரத்தம் காயாதடி.... 

உயிர் துறக்கும் வரை !!!

ஆணும் பெண்ணும்

ஆண்கள் காதலை சொல்லாமல் இருப்பதில்லை -
பெண்கள் அதை ஏற்பதில்லை
பெண்கள் காதலை சொல்வதில்லை -
ஆண்கள் அதை மறுப்பதில்லை

Thursday, April 15, 2010

கன்தெனியவும்... அட்டகாசமும்(அட்டைகளின்)

நான் சொல்வது எல்லாம் உண்மை உண்மைய தவிர இங்க நான் பிள்டப் பண்ணல... பண்ணல.. பண்ணல...  என்டா மட்டும் நீங்க என்ன நம்பவா போறீங்க.. ஆனா.. இது உண்மை....


அன்று .... நான் வழமைக்கு மாறாக காலை 3.30 க்கே எழும்பிட்டன்.. வழமையா நான் நித்திரைக்கு போறதே அந்த நேரம் தான்........ நானாவது பருவால.. நம்மட ரூம் மேட் அண்டைக்கு படுக்கவே இல்ல... என்னடா புலி புண்ணாக்க திண்ணுற மாதிரி இருக்கா ???  ஆமாங்க.. இனி எல்லாம் இப்பிடிதான்..(நாயகர் பட ஸ்டைலில்...)

எங்கட யுனிவர்சிட்டி இல.. எது எப்புடி எப்ப செய்வாங்க என்டு.... கடவுளுக்கே தெரியாது.. ஏனென்டால் அவர்களின் முடிவு எப்ப மாறும் என்டு... அவங்களுக்கே தெரியாது....அப்படி ஒரு முடிவுதான் இந்த சுற்றுலா என்டு சொன்னாங்கள்.. ..
                                          நம்மட பொடியங்கள் பட்டிகாட்டான் முட்டாசு கடைய பாக்க போற போல..... செம குஷி..... சுற்றுலா போறோமோ இல்லயோ.. தமிழ் ஆக்கள் எல்லாம் சேர்ந்து பஜாரா சேர்ந்து போவம் என்டு முடிவு எடுத்தாங்கள்... அதுல...கிட்டத்தட்ட 30 பேர் தமிழ் இருக்கும்... வந்து சேந்தாங்கள்....
காலையில 4 மணிக்கு புறப்படுற என்டு பிளானிங்.... எதையும் பிளான் பண்ணாம செய்யப்படாது... என்ட தத்துவம் இவங்களுக்கு விளங்கி இருக்கு..(வடிவேல் எப்ப சிங்கள படத்துல நடிச்சேர் என்டு தான் எனக்கு விளங்கல) ஆனா நாங்க எங்க சொன்ன நேரத்துக்கு கிளம்பி இருக்கம்.... . எனக்கு அப்பவே தெரியும் இவங்க 4 மணி என்டா 6 மணிதான் என்டு...சரி பாவி பயலுக... என்ன செய்ற... தலையோட சேர்ந்து வாலும் ஆடதானே வேணும்.... இல்ல என்டுவிட்டுட்டா வரமுடியும்.. இதுக்குல தாங்கள் வீட்ட இருந்து வரக்குலய போட்டே எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.. நம்ம இடியமீனும் பாலக்குட்டியும் ....... போட்ட எடுக் இடம் இல்ல என்டு Galle Rd ல படுத்து கிடந்து... ஏதோ இரண்டு ட்ரக்ல லாறி பிரேக் டவுன் ஆன மாதிரி.....








டூர் போகக்குள்ள பாட்டு படிச்சு பம்மலா போற சகஜம் தானே... சி னா பொடியல் பாட்ட தொடங்கினாங்.... நாங்க என்ன அவங்களோட சேர்ந்து பாடவா முடியும்...நாங்க என்னத்த பெரிசா செய்யப்போறம்... என்ன எங்களால முடிஞ்ச உதவி.... என்ன செய்ற நாய் வேசம் போட்டா குலைச்சுதானே ஆகனும் கைதட்டினோம்.( எங்களால கைதட்டல் தான் வாங்க முடியல.. கையாவது தட்டுவம் என்டுதான்)



சி னாக்கு த னா தெரியா என்ட நம்பிக்கயில.. வாயில வந்த வார்த்தயெல்லாம் போட்டு நாங்களும் பாட்டு படிச்சம்......நாங்க ரொம்ப நல்லவங்க..... டூருக்கு பிறகு கெட்டவங்களாகிட்டம் என்டு நினைக்கிறன்...
மட்ட பஸ்ல என்ன கதைபோன என்டு எனக்கு தெரியாது... ஏன் என்டா 
எனக்கு உண்மையா தெரியாது.......
 சரி விடுங்க..... எவ்வளவு காலம் தான் பஸ்ல யே இருக்கிற.... இடைக்கிடையில பஸ் நிக்கிறதும்.. நாங்க இறங்கி தள்ளுறதும் என்டு 2 , 3 தடவை நடந்துச்சு... அப்பிடி இப்பிடி என்டு கன்தெனியா காட்டுக்கு வந்துட்டம்.....
அங்க போனா அங்க கயிடு தெரியுமா கயிடு.... அதாங்க.. இடமெல்லாம் சுத்தி காட்டுவாங்களே....
காட்டுக்கு போகமுதல் எங்களுக்கு மீட்டிங் போட்டாங்க... என்னன்டா காட்டுக்குள்ள பாம்பு, அட்டை,பூச்சி,எல்லாம் இருக்காமாம். கவனமாமாம்....
அதுக்கு பிறகு, சித்தாலேப்பே தந்தாங்க.... கால் , கை எல்லாம் பூசட்டாம்.. அட்டைக்கும் சித்தாலேப்பேக்கும் ஒத்துவராதாம் என்ன ஜென்ம பகையோ தெரியல.. ..அதான்பா தந்தாங்க..
நம்மட பொடியலும் ஓசி என்ட உடனே.. ஏதோ பண்ணிக்குட்டிகள் புண்ணாக்குக்கு அடிபடுற மாதிரி... சித்தாலப்பேக்கு அடிபட்டாங்க என்டா பாத்துக்குங்களேன்.....
அடி பட்டு இடிபட்டு கைகால் எல்லாம் அள்ளி அள்ளி பூசினவங்க.. கொஞ்சநேரத்துல அம்மா உம்மா என்டு மண்ணென்ணெய் பட்ட பாம்பு போல அங்க இங்க என்டு... கிளம்பி திரிஞ்சாங்க. (என்னடா இவன் எதுக்கு எடுத்தாலும் மிருகங்களோடவே எங்கள ஒப்புடுறான் என்டு பாக்கிறீங்களா.. என் செய்றது ...பூனையையும் புலியையும் ஒன்டு என்டு பொய் சொல்லலாம்.. அதுக்கு எலிதான் புலி என்டா... என்னை மட்டவங்க அடிக்க வருவாங்களால இல்லயா... நீங்களே சொல்லுங்க... பொய் சொன்னாலும் பொருந்ததான் சொல்ல வேணாம்.. அட்லீஸ் கேக்கிற மாதரியாவது இருக்கதானே வேணும்.. என்ன நான் சொல்றது....)
சரி அதுக்கு பிறகு 5 குருப்பா பிரிஞ்சு மலை மலையா..... காடு காடா திரிஞ்சம்....மூஞ்சூருக்கு தான் ஓட்டைக்குள போகவே வழி இல்லயாம் அதுக்குள்ள விளக்குமாத்தையும் இழுத்துட்டு போன கதையா.. நம்மட பொடியல் தாங்கள் பாதுகாப்பா போக வழியில்ல அதுக்குள்ள நம்மட பொம்பள பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேற வழங்கனும் என்டு ( அவங்கட்ட இருந்து நாம முதல்ல நம்மல காப்பத்தனும் என்டு சொல்லவா முடியும்..... இத ரகசியம் .. யாரிட்டயும் சொல்லாதீங்க.. அதான் Hide  பண்ணிருக்கன்) 
இனி எங்கட அட்டைப்படலம் தொடருது.... (என்னடா மகாபாரதத்துல வர்ற மாதிரி படலம் எல்லாம் வருது.. என்டு பாக்கிறீங்களா ?? நம்மட கதையோட ஹீரோ அட்ட தாங்க....)

அதுக்குள்ள நம்மட கட்டை ... அட்டை பெரிசா... இல்ல தான் பெரிசா என்டு சண்டை...முடிவா வென்றது அட்டை... 
அட்டைய.. குட்டையில... மர பட்டையில.....ஏன் அவங்களுக்கு கிட்ட எல்லாம் தேடினாங்க.... ஆனா அவங்க மொட்டயிலயும் சொட்டயிலயும் இருக்கா என்டு பாக்க மறந்துட்டாங்க... அவங்க மொட்டயில இடிவிழுந்தாலும் சறுக்கி விழுந்திடும்... அட்டையால நிக்க முடியுமா என்ன....
என்னதான் இருந்தாலும் அட்டை சிலபேரின் ரத்தத்தை பதம் பார்க்க மறக்கல்ல...
அதிலும் சிலபேர் தங்கள் இங்கிலிசையும் மறக்கல... அட்ட கடிச்ச நேரத்துல.."Please take it !!"  என்று ஆங்கிலத்தில் (அட்டைக்கு இங்கிலிசு தெரியுமா.. தமிழ் தெரியுமா.. சி னா தெரியுமா இல்ல அது மனுசன் என்டுதான் தெரியுமா.. அது பிடிச்சா சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்டு இரத்தத்த குடிச்சுட்டு போகுமப்பா (வடிவேலின் பாணியில்)) ஆபத்தை விளக்கிய பெண்களும்.அதுலயும் ஒரு அறிக்கை.. வெள்ளக்காலுக்கு அட்ட கடிக்காதாம்.. இந்த கொடுமைய எங்க போய் சொல்லுறது...இதுக்கு எங்காவது லாயிக் இருக்காங்க .. நீங்களே சொல்லுங்க....இவங்க எல்லாம் எங்கள் கம்பசில் படிக்கிறார்கள் என்பதை நினைக்ககுள்ள.. எனக்கு புல்லரிக்கிறது...


அதிலும் இன்னொருவ... ஆங்கில மேதை..... அட்டை கடிச்சதுக்கு.. பக்கத்துல கிடந்தவனங்களெல்லாம் ஆட்டம் போட்டு பயமுறுத்தினவ....
ஆம் அவரை பற்றி சொல்லனும் என்டா..அவ எங்கட கொட கண்டின் ல சாப்பிடுறதே இல்ல..ஏன் என்டா டயட்டாம்.....
இன்னொருந்தர் தனது வீராப்பு காரணமாக கன்தெனியாவின் மண்ணுக்கு விழுந்து வணக்கம் போட்டவ.ஏன் என்டா தனக்கு ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க்கு சாப்பிடுற மாதிரி.. நல்ல காலம் தொப்பென்று விழுறது. மெத்தயில தவழுற மாதிரி என்டு சொல்லல... . ஆமாங்க..... ஆறு ஒன்றை கடக்கும் பாதையில் கற்கள் நிலையில்லை என்று யான் எடுத்து கூறியும்..சானியா மிர்ஷா  எனும் நினைப்பில் கால் எடுத்து வைக்க... கல் கவுல... அவ ஆற்றுநீரை மொல மொல என்டு குடிச்சா பாருங்க.. அந்த ஸ்டைல் இருக்கே..... அப்பப்பா..... அதுல அவட கால் வேற 30 Hz இல் வைபிரேஷன் பண்ணுது... ம்... இதான் சொல்றது.. பெரியவங்க சொன்னா கேட்கனும் என்டு...
இனி.... அட்டை அடேக் பண்ணிணவங்கள பாப்பம்..... சிலர் அட்டையயும் அடேக் பண்ணினாங்க..
அதுல முதல் இடம் பெறுபவர் எங்கள் கள்ளச்சிரிப்ழகர் விளையாட்டு வீரர்....
அவர் போன பிறப்புல என்ன பாவம் செய்தாரோ தெரியல...அட்டைக்கும் அவருக்கும் அப்பிடி ஒரு பாசபிணைப்பு...அட்டை அவர விட்ட பாடு இல்ல... அவன்ட காலில ஏறின பாடுதான்.. அவனும் அத தட்டுறதும் .. பிறகு.. அட்ட ஏறுறதும்.... இப்பிடி 7 ,8 தரம்..அட்டைய துாக்கி மெத்தயில விட்டாலும் அது குப்பையில போய்தான் அது இருக்கும் என்டுறவங்க.. அதுக்கு இவன் என்ன குப்பைப்பயலா ??? அவனுக்கு அழுத்து போய்.. சரி வந்தனி ரத்தத்தை குடிச்சுட்டு போ..... என்டு விடாத குறை...



நெக்ஸ்ட்டு Mr. Bruce  என்டு தன்னை தானே சொல்றவர்...
அவருக்கு அட்ட பாரபட்சம் எல்லாம் பாக்கல.. அட்ட அவர கடிக்க... அவர் அட்டைட்ட கடி வாங்க... பிறகு அட்ட அவர கடிக்க.. அவர் அட்டைட்ட கடிவாங்க.... இப்பிடியே .......... (நான் என்ன கதையா சொல்லுறன்.... இரண்டும் ஒன்டுதான்....) அவர் கடிவாங்கி இரத்தம் குடுத்த பெறுமைய நான் என்ன என்டு சொல்ல.... அதுலயும் அவருக்கு ரணகலத்துலயும் ஒரு கிலுகிலுப்பு .. தான் ரத்தம் குடுத்த இடத்த.. போட்டோ எடுத்து .. பேஸ் புக்ல பொபுலர் ஆக படத்த போட்டு... ரத்தகளரி என்டு தலையங்கம் வேற... எப்புடித்தான் யோசிக்கிறாங்களோ தெரியல...சும்மா கிளப்புறாங்கப்பா பீதிய...

நம்மட மாரன்(“மா” க்கு பக்கத்துல “க” வை சேத்து கொள்ளுங்க..) அட்டையோட தான் ஒரு படம் எடுக்கோணும் எண்டு ஒரே பிடிவாதம்... அது என்னடா உன்ட மாமனா மச்சானா.... பிடிச்சா.. ரத்தத்தை குடிக்கும் என்டா.. தானும் குடிக்கிறவனாம்.. ரத்தத்தை இல்ல.... என்டு ஒரே ஆட்டம் தாங்க முடியாம.. படம் எடுத்தாச்சு...


அதுக்குள்ள ஒருவன் அங்க இங்க என்டு.... காலையில போகாதவன் மாதிரி ஒன்டுக்கும் இரண்டுக்கும் போற மாதிரி அங்க இங்க என்டு போஸ்..... அவன்ட முதல் எழுத்து “கு” இரண்டாவது எழுத்து “ரு”....





எனக்கும் அட்ட கடிச்சது.... ஒரு அட்ட.... ஆனா.. எவ்வளவு ஏலுமோ .. அவ்வளவு குடிச்சுட்டு.. ரத்தத்த... 

..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................
..........................................................................................................


இப்பிடி கணக்க பேருக்கு நடந்திருக்கும்... அவங்க மேல உள்ள கோட்டுள.. உங்கள பற்றி நிரப்புங்க..... எனக்கு வேற தெரியாது...நீங்க அட் பண்ணினா.. நான் சேர்க்கிறன்.. என்ன சரியா ?? 


சரிடா என்டு.... எல்லாம் முடிஞ்சு வரக்குள்ள.. பஸ்ல பட்ட பாடு இருக்கே... சப்பப்பா... நினைச்சாலே தலை இடிக்குது..... 

பொம்பளங்களா அவங்க.... சண்ட பிடிக்கிற என்டா அவங்கட்டதான் ட்ரேய்னிங் எடுக்கனும்.... நம்மட பொடியங்கள் உசுப்பேத்தினா.... வாலை கிளப்பி சூடு போட்ட மாடு போல சண்ட சும்மா அப்பிடி துாள் பறந்துச்சு....

ஒருமாதிரி சண்டைய சமாதான படுத்தி.. வீடு சேர போதும் ..போதும் என்டு ஆச்சு.....




comment

LinkWithin

Related Posts with Thumbnails