Sunday, December 9, 2012

வெண்தூமம்

 வெண்தூமம்


எமது இனம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டு சென்றாலும் எனது இனத்தை அழிக்க முன் நாம் அவர்களை கூண்டோடு பஸ்பமாக்கி விடுவோம்.
நாங்கள் அவர்களது அடிமைகளாகி அவர்களை அடிமையாக்குவதுதான் எங்களின் ஆயுதம்.இன்றில்லை என்றாயினும் அவர்கள் இறப்பார்கள். அவர்களின் மரணம் தான் எங்களின் மரணமும்.இது எங்களின் உயிர் கொடுத்து உயிர்எடுக்கும் தற்கொலைதாக்குதல்.
எம்மை அனுபவித்து விட்டு எங்களை பஸ்பமாக்கி விட்டதாக அவர்கள் நினைத்து கொண்டு இருக்கின்றனர்,இறுதியில் அனைவது நிச்சயம் அவர்கள்தான்.அது அவர்களுக்கும் தெரியும். எமது கனவுகள் எரிக்ப்படுகின்றன.
அவர்களின் ஒருவன் மட்டும் ஒருநாளைக்கு இருபதுக்கு மேற்பட்ட எங்களது வாழ்வினை தீக்கிறையாக்கிறான்.எமது அன்றாட மரணம் சாதாரணமானது ! ஆனால் எம்மை கற்பழித்து, காலில் போட்டு மிதித்து சாகடிக்கும் கதை இது.சொல்கிறேன் கேளுங்கள்.எனது சோகக்கதையை சொல்கிறேன் கேளுங்கள்!!

நான் அன்று தோழிகளுடன் கூடி இருந்த வேளை, அந்த நயவஞ்சகர்களுள் ஒருவன் வந்தான் என்னை மட்டும் அப்படியே உருவி எடுத்தான்.எதிர்பேதும் காட்ட முடியாது என்னால்,எனது தோழிகளின் ஜீவன வாசம் அவனது வாயில் இருந்து வந்து கொண்டிருந்தது. என் நிலமையை என்னால் உணர முடிந்தது.எதிர்ப்பேதும் காட்டதவளாய் அனுசரித்து போனேன் இருந்தேன்.அவன் காமத்தீ என்னை கொஞ்சம் கொஞ்சமாய் எரிக்க தொடங்கியது. அவன் ஆசை அணையும் வரை அவன் உதட்டின் மீது என்னிதழ் வைத்தது , அப்படியே என்னை .................. அப்பப்பா!!!!!  நினைக்கவே நெஞ்சு எரிகிறது, என் மீதான அவனது காமம் அவனுக்கு அடங்கியதாய் இல்லை.. என்னை மேல் இருந்து அடிவரை முற்றாக அனுபவித்து விட்டான்.

படுபாவி அவன் அவன் இச்சை அனைந்ததும் என்னையும் அவன் காலுக்கடியில் இட்டு கசக்கி என்னை மூர்ச்சையாக்கி விட்டு , என்னை
யும் அனைத்து சென்றான்.

என்னுயிர் அவன் வாயிலிருந்து வெண்தூமமாய் கிளம்பியது.கல் நெஞ்சக்காரன் இந்த வெண்சுருட்டின் மீது வெள்ளை மனம் கொள்ளக்கூடாதா??


பி.கு - என் அண்ணனின் கவியால் தூண்டப்பட்டு வந்த கதை இது.

No comments:

Post a Comment

comment

LinkWithin

Related Posts with Thumbnails