மொரட்டுவை பல்கலைக்கு காலடி வைத்த காலம். புதிய இடம் , புதிய மனிதர்கள், மனதில் ஒருவித கலக்கம். அப்போது மழைக்காலம் நானும் எனது 2 பொடியங்களும் ரூம் வாடககைக்கு எடுத்து தங்கியிருந்தம்..
கொஞ்ச நாளாக எமது ரூமில் சில மாற்றங்கள் , அதுவும் இரவில் மட்டும் , விசித்திரமான சத்தங்கள் , யாரோ ஒருவன் இரவில் எமது அறையை நோட்டமிடுகிறான் ,நாள் செல்ல செல்ல அவன்ட அட்டகாசம் தாங்க முடியல்ல... அவனது திடீர்தாக்குதலால் என் மீது சில கீறல்கள் , கூரிய ஆயுதங்களால் வேறு நான் தாக்கப்பட்டு இருப்பதை உணர்ந்தேன் ஆனால் யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை...
யாராக இருக்கும் ??? ஒரு வேளை எங்கட சீனியர்ஸ் யாரும் என்ட ரூம்ல சாப்பாடு ஏதும் இருக்கு மென்டு களவெடுக்க வந்திருப்பினமோ ?? இருக்காதே நான்தானே வழமையா அவங்கட ரூமுக்கு போய் அமுக்கிறனான்...
வேற எங்கட பொடியங்கள் !!!! அவங்களும் இருக்காது வந்தா வதைபட்டு செத்துடுவாங்கள் .....
சோ...... இவன் வேற யாரோ அன்னியன் !!!!! கொஞ்சம் பயம் தொற்றி கொண்டது !!!!! எங்கட ஏரியால குடுக்காரன் அலையிறதா கேள்விபட்டு இருக்கன் , ஏதோ கிரிஸ் கத்தி எல்லாம் கொண்டு திரியிரவனாம்.. என்ட சீனியர்ஸ்மார் வேற போன் , காசு என்டு அவனுக்கு வாரி இறைச்சிருக்கினம்... ஆனா நான் அவனுக்கு பயப்பட மாட்டன் அவனை ஒரு கை பாக்கிற என்டு முடிவு கட்டிகொண்டு . இன்று அவனை கையும் களவுமாக பிடிக்கிறதுக்காக பல முன் ஆயத்தங்களை செய்தேன்.
எனது தலைமாட்டுல ஒரு கத்தி ...... கட்டிலுக்கடில கம்பு கொட்டான் எல்லாம் ரெடியா எடுத்து வச்சுட்டு... அவன் வரும் நேரம் வரை காத்து இருந்தேன் .. அவன் வரும் நேரம் வரும் போது கட்டிலில் அப்படியே தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டேன்.....
ஆ!!! அவன் வருவதை அவனக்கென்ற விஷேட சத்தத்தின் மூலம் அறிந்து கொண்டேன். தகுந்த தருணம பார்த்து காத்து கொண்டு இருந்தேன். எனது அறைமுழுவதும் அவன் அலசி ஆராய்கிறான். அடிக்கடி என் பக்கம் வந்து என்னையும் நோட்டமிடுகிறான். சரியான தருணத்தில் தான் அவனை போட வேண்டும் என்டு பாத்து கொண்டு இருந்தேன்.
இதோ .... அவன் என் கால் பக்கமாய் வந்து முகப்பக்கமாய் வந்துவிட்டான்.
அவன் என்னை பாரா சமயம் ....
ஓங்கி விட்டேன் ஒரு அறை.......
அப்பிடியோ இரத்தத்தில் அவன் மிதந்தான்....
ஐயகோ .. பாவம் செத்தே விட்டது அந்த நுளம்பு !!!!!!
No comments:
Post a Comment