வாணன் -
நடிக்கத்தெரிந்தநட்புகளுக்கு தெரியவில்லை
நானும் நடிகன் தான் என்று
வதையன் -
நானும் நடிக்கத்தான் பார்க்கிறேன்
நடிக்க மட்டும் என்னால் முடியவில்லை
நடிப்பு என்று தெரிந்த பின்பு
நடிக்க இனி தேவையில்லை
நாடகம் முடிய முன்பு
நடிப்பாவது முடியவேண்டும்...
வாணன் -
முடிவில் மட்டுமேமுடிபவை முடியக்கூடியவை
நாடியும் , நடிப்பும்
நானும் தான் - போட்டியின்
வதையன் -
உனக்கு புரிந்தவை சிலஎனக்கு புரியவில்லை , ஏன்
புரியக்கூடி இல்லை...
நாடகம் ஒன்று போகிறது - ஆனால்
கதை மட்டும் புரியவில்லை...
வாணன் -
புரிந்தவை எல்லாம்புதுமையும் இல்லை.
புரியாதவை எல்லாம்
புதுக்கவிதையும் இல்லை..
நடக்கும் போராட்டங்களில்
நடாத்தக்கடினமானது வாழ்க்கை தான்..
நாடும் விருப்பங்களினால் ..
நனைவது எல்லாம் என் தலையனைதான்..
வதையன் -
கவிதை எழுதப்போன நான் - இன்றுகதை எழுதிக்கொண்டு இருக்கிறேன்...
கவிஞனாகத்தான் ஆக முடியில்லை....ம
கதையாசிரியனாகவாவது ஆகிறேன்..
தன்னை பற்றி சிந்திக்க மறக்காத மனிதன்...
பிறறை பற்றி சிந்திக்க மறக்கிறான்...
நட்பு என்று வந்த பிறகு
சில நாடகங்கள் தேவையில்லை...
வாணன் -
நாடகமாகிப்போன வாழ்வில்நட்பிற்கும் தேவை நடிப்பு - சிலநேரம்
பாடமாகிக்கொண்டிருக்கும் வாழ்வில்
பள்ளியறைக்கும் தேவை பணம்தான் - பலநேரம்..
பிறக்கத்துடிக்கும் பிஞ்சுக்கு
தெரிவதில்லை தாய்மையின் வலி..
மறைக்கத்தெரியும் மனதிற்கு
மறக்க மட்டும் ஏனோ தெரியவில்லை..
சிரிக்கத்தெரிந்த கண்களுக்கு
சிந்தத்தெரிவதில்லை சில கண்ணீரை...
வதையன் -
முடிவு ஒன்ற தேடி முடிவெடுப்போம்...முடியாது எதுவும் இல்லை என்றால்...
முடிவு மட்டும் ஏன் முடியாது ??...
முற்றாக முற்றுபெற முடிவாய் முடிவெடுப்போம்..
இத்தோடு முடிக்க எண்ணி முயல்கிறேன் முடிவோடு...
வாணன் -
முடிந்த முடிவுகளுக்கு ..முடிவு எடுக்க தேவை இல்லை....
படிந்த கறைகளுக்கு
பரிகாரம் செய்ய ஏதும் இல்லை....
இறங்கா பாதையிலே
சிருங்கார வாழ்க்கையிலே ....
சிறகடிப்போம் - நண்பர்களாக - நட்புக்காக -”நண்பர்களுக்காக...”
No comments:
Post a Comment