நண்பன்
நினைவு வந்த நாள் தொடக்கம் ...
நினைவு வந்த நாள் தொடக்கம் ...
இன்று நின்று கொண்டுறிக்கும் நாள்வரை...
நான் நினைக்கும் நண்பர்களுள் ..
என்னை நினைக்கு நண்பர் கதை இது.........
தோள் கொடுப்பான் தோழன் என்டு
தோள் நிமிர்த்தி சொன்னதுண்டு..
ஆப்படிக்கும் போதெல்லாம்
அப்பாவியாய் சிரித்த்துமுண்டு
அணைத்தாலும் அடித்தாலும்
நீ என்தன் நண்பேண்டா...
பரீட்சை எழுதியபின் நீ என்னை கண்டு சிரித்தபோது..
உன்பிழைப்பும் என்னைப்போல் சிரிக்கிறது
என்றெண்ணி..நான் இருந்தேன்
முடிவுகள் வந்தபோது புரிந்து கொண்டேன்
உன் புன்னகையின் பின்விளைவை..
என்னோடு இருக்கும் நண்பர்களுள்
எனக்காக இருக்கும் நண்பர்கள்
தோள் சாய்ந்த நேரத்தில் தோழனாய்
தோள் கொடுத்தவன் உண்டு
எனக்காய் என்னோடு நடந்தவன்
அவள் வீடுவரை நடந்தவள் உண்டு
,நண்பியாய் நம்பிக்கை நட்புடனே
கொடுத்தவள் உண்டு
மனம் புதைந்த நேரத்தில் மனதோடு
மனம் விட்டு கதைத்தவன். உண்டு
கண்ணீர் விட்ட நேரத்தில் கட்டியணைத்து
அழுதவன் உண்டு
இத்தனை பேர் இருக்க
எனக்கேதும் தேவையில்லை ....
துயரங்களின் வருகையிலே உன்
நண்பனை நீ அறிந்திடுவாய்..
No comments:
Post a Comment