Wednesday, July 10, 2013

அவள் ஒரு தாவரம்

புவியாண்ட கவிஞர் எல்லாம் - பெண்ணை
 கண்ட பார்வை , உனை மேல் நான் காணவில்லை
கவி கொண்டு உன் மேல் நான் காதல் கொண்டேன் - நீ
தாவரமாய் நின்றாய் , நான் தா ”வரம்” என நின்றேன்.
மொட்டிடை உடையும் மெல்லிய இசைபோல்
அவள் கண்ணிமை மடியும் ஒலி செவி அறியும்
மரக்கிளை வழியே உருவிடும் தென்றல் - அவள்
மூச்சிடைக்காற்றில் மருவிடும் என் கண்கள்

கொடியிடையாள்  செடி வளைவுடையாள் - மென்
மலர் மடியுடையாள் அவள் பெரு வடிவுடையாள்
மகரந்த விழியும் , அதன் மகரந்த மணியும்
அவள்  விழி வழியும் நீர்த்துளியும்
நிதம் சொரியும் மலர் போல் அவள் புரியும் சிரிப்பும்
பூவிதழ் உதடும் அதில் நாவூறும் தேனும் - அவை
கிடைக்காத துயரில் மடிகின்ற நானும்.

மர நிழலின் சுகமும் உன் குழல் நிரலின் இதமும்
எனை கண்ணயர வைக்கும் உனை என்னென்று சொல்வேன்
உன்னிதழில் கண்டேன் அது பூவிதல் என்றேன்
உன்னிதழ் கண்டு அது என்னிதழ் மேல் சாய
இதழ் மறைத்த முள்ளொன்று என்னிதலில்  பாய
தெத்திப் பல்லொன்று கண்டேன் அதில் தித்தித்து நின்றேன்.

 வேர் கொண்ட கூந்தல், நான் நூல் போலே இழைவேன் - அதன்
சார் கொண்ட மணத்தில்  மனம் மறந்து பறப்பேன்
புற்றரை புருவத்தில்  சட்டென சரிந்தவேன் - அதன்
பனி படர்ந்த வியர்வையில் என் முகம் சாய்த்து நனைவேன்
அசைகின்ற காற்றில் அலைபாடும் கிளை போல்
நடக்கின்ற போதில் என் மனதாடும் உனை மேல்
கிளைபோன்ற கையில் கிளிபோல ஒருநாள்
குடிகொள்ள வேண்டும் உந்தன் மலர் மடிசாய வேண்டும்.




No comments:

Post a Comment

comment

LinkWithin

Related Posts with Thumbnails