Sunday, July 7, 2013

என்னினியவள்

அவள் !!
அழகிய பெயர் அவளுக்கு !
பெயரை நினைக்கும் போதே எச்சில் நுனி நாக்கினோடி உதடு வழி எட்டிப்பாக்கிறது , எச்சிலை காற்றினால் உள்ளிழுத்து , எப்படி வர்ணிப்பது ?? சிந்திக்கிறேன். வல்லினம் தலைவழியே கொண்டு, மெல்லினம் இடைநடுவே நின்று முடிவினை  இடையினம் ஆக்கி மொத்தத்தை தன் உடலாய் ஆக்கி உயிர் கொண்டு உலவும் பெண் பதுமை இவள். அழகு அப்பிடியொரு அழகு. அவளுக்கேற்ற பெயர்.  , தேன் என்பர் , அமுதென்பர் , அவள் ஒரு கவி யென்பர் , ஐயோ அவளை என்னவென்று சொல்வதென்பர்!! கம்பன் கண்ட இராமன் போல் என்னாலும் முடியவில்லை ,கம்ப ன் நிலை இன்று என்னிலை.

அவள் அறிமுகம் எனது அம்மாவினால் தான் , சிறு பிள்ளையில் விளையாட்டாய் பழகியது வளர வளர , அவள் பால் ஈர்க்கப்பட்டேன்.அவள் மெல்லிடை அழகும் , சொல்நடை அழகும், பா மாலை அணியும் கழுத்திடை புரியும் என்னை பல கணம் சிதைய வைத்தன.
ம்.......  அவளின் அங்க நெளிவுகளும் ,சுளிவுகளும் , ஏற்றங்களும், இறக்கங்களும், அவளுக்கான புது பொலிவை எனக்குணர்த்தியது. அப்பபோது எனக்கு 16 வயது . அவள் மீதான என் பார்வைய மாறியது. ஏன் , அவள் என்னை மாற்றினாள் என்று கூடி சொல்லலாம். அவள் பண்பாடறிந்தவள் , தன்னகம் கொண்ட கலாச்சாரம் அவள் அடையாளம். புரிதலும் அறிதலும் தானே உறவின் அடித்தளம் அவள் என்னைப்புரிந்தாளோ இல்லையோ நான் அவளைப்புரிய ஆரம்பித்தேன் அவளுடனான உறவு வலுவாகியது. இதுவரை யார் யாரோ அவள் புகழ் பாடக்கண்ட நான் இன்று என் மனம் ஏனோ அவள் பால் ஈர்க்கப்பட்டது. அவளைப்பற்றி அறிய ஆவல் கொண்டது. அவளை இலகுவில் புரிவது கடினம், ஆனால் புரிந்தால் விரைவில் பிரிவது மெத்தக்கடினம். அவள் ஒன்றும் புரியாத புதிர் அல்ல நிறைவான காவியம்.கரை காண முடியாது கறையில்லா பால்கடல்.
ஆண்டுகள் கடந்தோடின….
உயர்தரபடிப்புக்காலங்களில் அவளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட மின்சாரக்கம்பி போல் , உயிரிருந்தும் இல்லாமல் இருந்தது .காரணம் கண்டுபிக்க முடியவில்லை, ஏன் நான் காரணம் கண்டுபிடிக்க, விரும்பக்கூடஇல்லை. எப்போதாவது அவள் வந்து வந்து போவாள்உயர்தரம்  முடிந்து பல்கலை சென்றேன். அவளின் சிநேகிதியுடனான அறிமுகம். அவளின் சிநேகிதியை சிறுவயதில் இருந்து தெரிந்தாலும் ,அன்னியோன்யம் இவளைப்போல் இல்லை . சிநேகிதியின் வருகை என்னை சற்று நிலை குலைய வைத்தது. அவளை முற்றாக மறந்தேன்.  அவளைப்போன்ற காந்தஈர்ப்பு இவளிடை இல்லை எனினும் பருவக்கோளாரோ இல்லை ஆர்வக்கோளாறோ ! இவளின் கிளர்ச்சியூட்டும் மாயை என்னை தூண்டில் போட்டது. நானோ சிக்கியும் சிக்காத மீனாய் திண்டாடிக்கொண்டு இருந்தேன். இவள் மேல் பித்துபிடித்தவர்களை விட இவளால் பித்து பிடித்தவர்கள் தான் ஏராளம்.என்னில் இருவரும் யார் யார் என போட்டி போட்டு கொண்டு இருந்தனர்.எனினும் என் பழையவளை மறக்கமுடியவில்லை, தொட்டில் பழக்கம் , விட்டுக்கொடுக்கவில்லை. புதியவளை வெறுக்க காலம் எனக்கு இடங்கொடுக்கவில்லை. அம்மாவின் விரும்பம் கூட புதியவள் மீதும் இருந்தது , ஏனென்று மட்டும் தெரியவில்லை அனைத்தும் கலாச்சார மோகம். புதியவளின் பழக்கத்திற்கு வீட்டில் ஆதரவும் கிடைத்தது ஆனால் அவளை அறிவது சற்றே கடினமாய் இருந்தது , இவள் எனது மனதை மட்டும் அல்ல மூளையையும் சேர்த்தே குழப்பி விட்டால். இவளால் நான் தூங்காத நாட்கள் எத்தனை,ஏதோ பிறந்த திடீர் ஞானம் என் கண்களை திறந்தது.
ஆம்! பழையவள்..
ஆம் இப்போது அவள் பழையவள் ஆகிவிட்டாளோ ??? இல்லை இல்லை என் நிலை அறிந்தேன் இன்று!! அன்று  அவள் அழகை பாத்து ஐயோ என்று சொன்ன நா !!! இன்று அவள் நிலை அறிந்து ஐயோஎன்கிறது !!! அவள் முற்றாக மாறிவிட்டால் , இல்லை இல்லை மாற்றப்பட்டு விட்டால் அவளது நடை ,உடை , நாகரீகம் , அனைத்தும் மாறிவிட்டது ஏன் மாற்றப்பட்டது என்று கூட சொல்லலாம்.  பலரது மோகப்பார்வை அவளெழிலை சிதைத்து விட்டது. மேலைத்தேய நாகரிகம் கொண்டு பலர் அவள் போக்கை மாற்றிவிட்டனர். அவள் என்ன செய்வாள். அவளுக்காக வாழ்பவர்களை விட அவளைக்கொண்டு வாழ்பவர்கள் அதிகரித்துகொண்டு இருக்கிறது. கைகொடுத்து நிக்கவேண்டிய நானே இன்று அவளை கை நழுவவிட்டேனே !!! இன்னும் அவள் என் கை விட்டு போகவில்லை, இல்லை அவள் என்னில் மாறாமல் தான் இருக்கிறாள் , இனியாவது அவளோடு வாழப்போகிறேன் , முடிந்தால் அவளுக்காகவும்.
அவள் வேறுயாரும் இல்லை.
.
.
.
.

அவள் தான் என்னவள்! என்னினியவள்  செந்தேனவள்! என் தாய் மொழியவள் , தமிழவள். அழியாத்தமிழ் இன்று அலையாடுகிறது . நிலையான தமிழ் இன்று தன்நிலையின்றி கலையன்றி கற்பிழப்பதுவோ!.செந்தீ வந்து என் ஊணுடல் எரிந்தாலும் செந்தமிழ் மொழியை எந்தன் வெந்த உடல் பேசும் . தமிழ் இனி என் பேச்சினில் என்றும் வாழ்ந்திடும் , மூச்சுக்காற்றினில் கலந்திடும்.

(இப்போது மறுமுறை வாசிக்க உட்கருத்து உணர்வடையும் உண்மையும் தெளிவடையும்)

2 comments:

  1. அருமையான பதிப்பு .. தன்னை இழந்து தன் மானம் மறந்து தரம் கெட்டு கிடக்கும் தமிழ் மக்களுக்கான ஒரு குரல் இதுவாக அமையட்டும் .

    ReplyDelete
  2. நல்லா படைப்பு வாழ்த்துக்கள்......

    ReplyDelete

comment

LinkWithin

Related Posts with Thumbnails