Friday, May 28, 2010

ராகிங்...

“ராகிங்” இந்த வார்த்தைய கேட்ட உடனே என்ன சும்மா அதிருதுல்ல... என்டு நான் சொல்ல வரல....அது ஒரு சுவாரஸ்யமான விசர்வருகின்ற நிகழ்வுகள் ....
முடிவா நீ இப்ப என்ன சொல்ல வர்றா என்டு தானே கேக்குறீங்க... ஏன்னா எனக்கு ராகிங் வேண்டுறது....ஜாகிங் போற மாதிரி...என்டு எனக்கு சொல்ல மட்டும் ஆசை இருக்காதா... ஆனா அது அப்பிடி இல்லங்க... உதாரணத்துக்கு ஐஸ்கிறீம்ம உங்க முன்னாடி வச்சுட்டு சாப்பிடு ஆனா.. வாயால இல்ல .. மூக்கால என்டா உங்களுக்கு எப்பிடி இருக்கும்... அதான் ராகிங்கு..ஆசை காட்டி மோசம் பண்றது...


என்னதான் யுனவர்சிட்டில ராகிங் அதுகல முற்றாக தடை செய்தாலும்.... ராகிங்க நம்மட பயபுள்ளக விட்ட மாதிரி தெரியல... அதோட அந்த நேரத்ததில கிடைக்கிற அனுபவங்கள கட்டாயம் அனுபவித்துதான் ஆகனும்... அது ஒரு தனி சுகம்...... (எப்புடி எல்லாம் பில்டப் பண்ண வேண்டி கிடக்கு...)

சரி நான் இப்ப ராகிங் என்டதுல முக்கியமா உடல் ரீதியான ராகிங்க நான் இங்கு குறிப்பிடல... ஆனால கதைச்சு கதைச்சு அறுப்பாங்களே(அதாங்க நான் உங்களுக்கு. இங்க செய்றன்) அத பற்றிதான் கதைப்பம் மன்னிக்கவும் அறுப்பம் என்டு நினைக்கிறன்...


ராகிங்ல அறுக்கிறதுல பலவகை இறுக்கு....
சிலர் கதைச்சாலே அறுவ.... இன்னும் சிலர்... நாங்க கதைக்காட்டி வதைப்பாங்க.. மொத்தத்துல சொல்லப்போன.. அது ஒரு ராகிங்க.....என்னால ராகிங்க ராகிங் என்டுதான் சொல்ல முடியும்... அதுக்கு வேற விமர்சமமே கிடையாது....
சிலர் அறுப்பாங்களே அறுவ.... தாங்க முடியாது... “டேய் நீ கதைக்கவே வேணாம் வேணும் என்டா உன்ட ரூம்முக்கு கூட்டி போய் அடிடா.... தயவு செய்து இப்பிடி மட்டும் அறுக்காத” என்டு சொல்ல தோணும்... ஆனா என்ன சீனியர் என்ட படியால அடக்கிட்டு இருக்கனும்.... (நான் வாயச் சொன்னன்...)

இன்னொரு வகை  வதைக்கிறவன் கதைக்கவே மாட்டான் ... ஆனா எங்கட கதைய நிப்பாட்ட விடமாட்டான் ... ஏதாவது கதைக்க விடுவான்.. பாட விடுவான்.... நாங்க கதைச்சு கதைச்சே எங்கட வாய் நோகும்.. செமயா களைக்கும்.... நான் இங்க தாங்க கதைச்சு களைச்சத கண்டு இருக்கன்.... எங்க தான் பிடிச்சாங்களோ இப்பிடி பட்ட  ராகிங்க... சத்தியமா சொல்றங்க.. இதுக்கு கிணத்துல விழுந்து சாகலாம் போல கிடக்கும்... இப்பதான் விளங்குது.. பல யூனிவர்சிட்டில பல தற்கொல நடக்கிறது உடல் ராகிங்கால இல்ல... இவங்கட கதையால என்டு....

சிலர் பண்ணுவாங்களே ராகிங்... சின்ன புள்ள தனமா இருக்கும்... பிறகு என்னங்க.. நட்ட நடுராத்திரில எழுப்பி எங்கள “அ” னா “ஆ” வன்னா தொடக்ம்.... நிலா நிலா ஓடிவா........  (ஏதோ பக்கத்து வீட்டுல நிலா என்ட பொண்ண ஓடிவா என்டு கூப்பிடுற மாதிரி...)
சொற்றுனை வேதியன்.... என்டு படிக்க விட்டா சின்ன புள்ளத்தனமா இல்லாம... அவங்க தாங்க சின்ன புள்ளயில அனுபவிச்ச நரக வேதனைய இப்பிடியா எங்கள வச்சு பழி வேண்டுறது.... 

அதுவும் போன் எடுத்து வதைப்பாங்கப்பா..வதையிலும் வதை அதான்......
சிலவேலை யோசிப்பம் ... அட நமக்கு லூசா... இல்ல  அவனுக்கு லூசா என்டு....அவன் என்ன செய்றான் என்டே தெரியாது... “அம்மா” என்ட வார்த்தைய 1000 தரம் சொன்னா பருவால 10 000 தரம் சொல்லுடா என்டுவான்.... அவன் எங்கள சொல்ல விட்டு அவன் தன்ட வேலையபாப்பான்...
நாங்களும் ஆர்வக்கோளாறுள 10 000 க்கு 10 010 தரம் சொல்லி நல்ல பெயர் எடுக்கலாம் என்டு நினைச்சா... அங்க உங்க நினைக்க கொண்டு போய் பனை மரத்ததுல தொங்க விடுங்க.... அப்பிடி நாங்க முடிச்ச பிறகு சொல்லுவான் நான் உன்ன 10 000 தரம் சொல்ல சொன்னான் நீ ஏன் 10 010 தரம் சொன்னி.... அதால மறுபடி 10 000 தரம் சொல்லு என்டுவான்....  என்ன இப்ப விளங்குதா யாருக்கு லூசு என்டு.....

சில பண்ணிப்பலுவ இருக்காங்க....   நடுராத்திரில நாய் எப்பிடிடா ஊளையிடும் ..  அதே மாதிரி ஊளையிடு...... கோழி எப்புடி கூவும்... மாடு எப்பிடி கத்தும்...
 என்டு எங்களுக்கு டிஸ்கவரி சனல் ஓட்டுவாங்க (இதுக்கு ஏன்டா எங்கள கூப்பிடுறீங்க நாங்க என்ன zoo ஆ நடத்துறம்..)...... நாங்க போன் கதைக்கக்குல பக்கத்துல ஒருவன் நின்னான்னு வச்சுக்குங்க..... அவனுக்கு மரை கழன்டுடும்... பிறகு என்ன.. இவன் மனுசனோட கதைகிறானா இல்ல ஆடு .. மாடு பண்ணிங்க கூட கதைக்கிறானா என்டு... டௌட் வந்துடும்... பிறகு என்னங்க. நடுராத்திரில நாய் மாதிரி ஊளையிட்டா.. சந்தேகம் வராதா பின்ன..

சில பொடியங்கள்ட அப்பா அம்மா.. சாமியார்ட்ட எல்லாம் போய் என்ட மகனுக்கு பேய் பிடிச்சுட்டு போல கிடக்கு... நடுராத்திரில ஊளையிடுறான்.. கத்துறான்.. குடையுரான் ....கொஞ்சம் திறுநீறு ஓதிக்குடுங்க என்டும் கேட்டு இருப்பாங்க...

கதைக்கிறத விட்டு.. இனி எங்கள நோண்டியாக்கி பார்த்து தாங்க சந்தோசப்படுறவங்களும் இருக்காங்க.....
நாங்களும் எங்கட சீனியர்சும்.. சும்மா பப்ளிக்ல போவம்.. போகக்குள்ள ஒருவன் சொல்லுவான் “ அதோ அங்க வர்ற குரூப்ட போய்.. விவேகானந்தர் எங்கட தாத்தா..... மகிந்த எங்கட மாமா என்டு சொல்லு” என்டுவான்..(விவேகானந்தர் எவ்வளவு பீல் பண்ணுவார் பாருங்க..)அவன் பக்கத்துல வருவான் ஆன எங்களை தெரியாத மாதிரி..... நாங்க போய் அவங்கட்ட சொன்ன இவன் விட்டுடுவான்.. ஆனா அவங்க ஏதோ இந்த பொடியன்.. ஓவரா படிச்சு தலைல கிறுக்கு பிடிச்சுட்டு......... யார் பெத்த மகனோ.. இப்பிடி பைத்தியா அலைறானே என்டு வருத்தபடுவாங்க......

நீங்க My self  பற்றி எத்தனை தாள் எழுதுவீங்க.... சும்மா யோசிச்சு பாருங்க.. குறைஞ்சது 4 பக்கம்... அதுவும் இங்கிலிசுல..... ஆனா இவங்க 20 , 30 பக்கம் எழுதிட்டு வா..அதுவும் ஒரு நாளுல... சும்மா நமக்கு இங்கிலிசு என்னடாலே..ஒன்னுக்கு போகும்..அதுல 20 பக்கம் என்டா மோசன் கூடி போகும்.. “டேய் என்ன பத்தி நான் எப்புடிடா 20 பக்கம் எழுதுறது.. அம்மா அப்பா.. அம்மம்மா தொடக்கம்.. நம்மட நாய்க்குட்டி.. நாய்க்குட்டிட அம்மா அப்பா,..நாய்க்குட்டிட தம்பி.. அக்கா , லவ்வர்.. கள்ளப்புருசன்.. ” வரை எழுதினாலும் 10 பக்கத்த தாண்டாது......


பகிடி வதை தொடரும்........................

Sunday, May 16, 2010

காதலிப்போரை கண்டுபிடிப்பது எப்புடி ??


 என்னடா இவன்.... வதைக்கிறத விட்டுட்டு. காதல்......கட்டில்.......நுளம்பு என்டு தன்ட ட்ரென்ட்டை மாத்துறான் என்டு நினைக்கிறீங்களா ???.. அப்பிடியெல்லாம் ஒன்டும் இல்லங்க.....யாரை வதைக்கிற என்டு யோசிச்சு யோசிச்சு.... கடைசில
காதலிக்கிறவங்கள.... அதான் love பண்றவங்கள எப்புடி கண்டுபிடிக்கிற என்டு நான் கண்டு பிடிச்சுட்டன்...

லவ் பண்றவங்கள பல வகை..... ஒருவன் ஒரு பொம்பளய (பொம்பளைகளை மட்டும் லவ் பண்றவங்கள் ) லவ் பண்ண தொடங்குற முதல் ஸ்டேஞ்.. பிறகு.. அப்பிடியே டெவலப் ஆகி.. ஆகி.... போய்.... சக்சஸ் ஆகிறது கடைசி ஸ்டேஞ்.. இல்லாட்டி அவள் எஸ்கேப் ஆகிறது கடைசி ஸ்டேஞ்...
இரண்டாவது கடைசிஸ்டேஞ்ல.. பல உட்பிரிவுகள் இருக்கு.....
    1 - அவனுக்கு மரை கழல்றது.....
    2 - அவன் அவளை கழட்டி விட்டு இன்னொன்டோட சுழல்றது...
    3 - இல்லாட்டி அவன் தண்ணி அடிச்சு... பண்ணி போல கிடக்கிறது..
    4 - etc....













நான் என்ன பாடமா நடத்துறன்...   1,2,3...... என்டு நோட் பண்ணி... அதுல உட்பிரிவு... வெளிப்பிரிவு.. .என்டு சொல்ல நீங்களும் பாத்து கொண்டு இருக்கீங்க..... உங்களுக்கு அறிவு இல்ல.....  சரி .. சரி.. கடுப்பாகாதீங்க.... (என்ன நீங்க இன்னும் கடுப்பாகலயா....) சரி... நான் விஷயத்துக்கு வாறன்...


இப்ப நான் கதைக்கப்போறது.... முதல் ஸ்டேஞ்.... எப்பவும் .. ”அ”னா... ”ஆ”னா...
ல இருந்து தானே தொடங்கனும்....இப்ப நாங்க லவ் பண்ண தொடங்குறவன எப்புடி கண்டு பிடிக்கிற என்டு பாப்பம்....


மு.கு - உங்களுக்கும் கண்டுபிடிக்கிற வழி ஏதாவது தெரிஞ்சா Comments இல்                                சொல்லுங்க.... நாங்கள் அதை வரவேற்கிறோம்....
முதலாவது ஐடன்டிவிகேசன் என்னன்டா....  - எப்ப ஒருவன் தான் லவ் பண்ற பொட்டைக்கு முன்னால நல்லவன் ஆகிறானோ...... அவனுக்கு “மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ...வந்தல்லோ....” தான்.....

உதாரணத்துக்கு..... அவனும் அவனோட கொஞ்ச பிரண்ட்சும் நிக்கிறாங்க என்டு வச்சு கொள்ளுங்களேன்.... அதோட அவன்ட ஆளும் (அவனுக்கு மட்டும்)  நிக்குறாள் என்டா.... அந்த வழியால போற பொம்பள பிள்ளைகளை எல்லா பொடியங்களும் பாப்பாங்க.. ஆனா.. இவன் மட்டும் பாக்க மாட்டான்... ஏதோ வாழ்கையில பொம்பள பிள்ளைகள பாக்காத மாதிரி..... ஆனா... அவள்... போற வாற.. பொடியங்கள நல்லா...(-----------------){நீங்களே இடைவெளிய நிரப்புங்க..}  

இரண்டாவது.....தங்கட வீட்ட தண்ணி வராட்டி கூடி அவளுட்ட ஏதோ...... உலகத்துலயே தங்கட வீட்ட மட்டும் தான் தண்ணி வரல.... என்டு... உலகச்செய்தி மாதரி.. தன்ட விஷயம் எல்லாம் சொல்லுவான்....
இதுக்கும் ஒரு உதாரணம் பாத்தா... அவனுக்கு ஒரு நுளம்பு கடிச்சுட்டு என்டு வைங்களேன்....ஏன் கடிக்காட்டியும் அவன் ஒரு ஊசியா தன்ட கைல குத்தி போட்டு வந்து ...... எம்மாம் பெரிய நுளம்பு எனக்கு கடிச்சுட்டு தெரியுமா....... 2 லீட்டர் இரத்தத்த குடிச்சுட்டி போய்ட்டு... என்டு கதை விட்டாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்ல...
அதுக்கு அவள்....ஏதாவது பதிலா... நீங்க அதை அடிக்கலயா என்டு கேட்டா..
அதுக்கு அவன்
இல்ல அத பாவம் என்டு விட்டுட்டன்...... என்டு வடிவேல் சொல்றமாதிரி இருக்கும் அவன்ட கதை.... ஏன் இன்னும் விட்டா போகக்குள்ள அந்த நுளம்பு எவ்வளவுதான் இரத்தத்த குடிச்சாலும் ஒன்னுமே செய்யா இருக்கிறானே.. இவன் ரொம்ப நல்லவன்டா..................... என்டு சொல்லிட்டு போன என்டும் சொல்லுவான்.....  

நெக்ஸ்ட்டு.. பீலிங்கு...
என்னா... என்னாப்பீலிங்கு என்டு பாக்கிறீங்களா.....
பொம்பளங்கள அடேக் பண்ற வழி என்ன தெரியுமா.. அனுதாபம்... அதாங்க சிம்பதி..... (ஒருவன் sympathy creat பண்றான் என்டா.. .அவனுக்கு டாலர் குத்த வேண்டியது தான்.. )
ஆமாங்க... அனுதாபத்துக்கு மடங்காத பொம்பளங்களே இல்ல.... (நான் இங்கு பொம்பளங்கள பற்றி மட்டும் குறிப்பிடுறன்..)  நீங்க வேணும் என்டா உங்கட நாய் குட்டி செத்து போய்ட்டு என்டு முதலைக்கண்ணீர் வடிச்சு பாருங்களேன்.... நாளைக்கு அவள் உங்களுக்கு புது நாய்க்குட்டி கொண்டு வந்து தந்தாலும் தருவாள்... (ஆனா... இது எங்கட கம்பசுல படிக்கிற எங்கட பொம்பள பிள்ளைகளுக்கு மட்டும் apply ஆகாது என்டு நினைக்கிறன்...... ஏன்டா அதுகள்.. நாங்க மண்டய போட்டா கூடி கை கொட்டி சிரிக்குற கேசுகள்....... ) lol :P சும்மா லொலலொலா.....



இப்பிடி இன்னும் இருக்கு.. மிச்சம் அடுத்த பாகத்தில்......................................


தொடரும்...........................


பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்....  !!! உங்களை அறுப்பதற்கல்ல.... என்னை திருத்துவதற்கு !




comment

LinkWithin

Related Posts with Thumbnails