Saturday, June 5, 2010

என்ன உலகம்டா.. ??

என்ன உலகம்டா இது.....
கவிதை வடித்தேன் காறித்துப்Pயது..
கதை எழுதினேன்.. கண்றாவி என்றது..
பாட்டு படித்தேன் பித்தன் என்றது....
நாடகம் நடித்தேன் நாசமாபோச்சு என்றது..

முன்னின்று உழைத்தேன் மூதேசி என்றது..
பன்ஜ் வசனம் சொன்னேன் பரதேசி என்றது...
உதவி செய்தேன்.. உதவாக்கறை என்றது..
நல்லதை செய்தேன் கெட்வன் என்றது...
கெட்டதை சொல்ல நல்லவன் என்றது..


பெண்களிடம் நட்பாய் கதைத்தேன் “வாளி ” என்றது..
குருவை மதித்தேன்.. “குழையடி ” என்றது..
நண்பனோடு நெருங்கி இருந்தேன் “நகிரினா.. தகிரினா  “கோவா” ”என்றது..
நண்பணை தள்ளி இருந்தேன்....“துரோகி ” என்றது..
பெரியோரை கீழ்படிந்தேன்.. “பம்முறான் ” என்றது..

ஏழ்மைக்கு உதவினேன்... ''நடிக்கிறான்" என்றது..
தாழ்மையிலும் சிரித்தேன்.. செருக்குபிடித்தவன் என்றது..
Addidas T-Shirt போட்டேன்.. அண்ணனின் “ஓசி ”என்றது
தலை நிமிர்ந்து நடந்தேன் தற்பெருமை என்றது.......
கம்பீரமாய் நடந்தேன்.... “உனக்கென்ன பைல்சா” என்றது.....

காதலிக்கிறேன் என்றேன்.. “காமடி பண்ணாதே” என்றது
கதை கதையா அளந்தேன் கலைஞன் என்றது..
செந்தமிழை பைந்தமிழில் வீசினேன்... கவிஞன் என்றது......
தன்மையாய் பழகினேன்... முரடன் என்றது.....
கடைசியில் ...உண்மையை சொன்னேன் வதையன் என்றது...

Friday, June 4, 2010

காதலிப்போரை கண்டுபிடிப்பது எப்புடி ?? பாகம் -2


இனி நாங்க நெக்ஸ்டு லெவலுக்கு போவம்...........

கொஞ்சம் முத்தின கேசுகள்...

..
......... என்னடா இவனுக்கு வேற வேலை இல்லையா... யாரையும் நோண்டுறதே வேலையா இருக்கானே என்டு நினைக்கிறவங்கள உங்கட மைன்ட் வோஸ்சை வச்சு கட்ச் பண்ணிருவன்......................
அதுலயும் நீங்க அப்புடி மறைக்கிறவங்களா இருந்தா தயவு செய்து கொமண்ட் பண்ணாதீங்க... அதுல வச்சு உங்களயும் பிடிச்சுருவன்......


சரி நான் கதைக்கு வாறன்.......

இதுல பல வகை இருக்கு
1  படிக்கிறவங்க
2 வெளிப்டையா இருக்கிறவங்க
3 ஊமைக்குசும்பங்கள்
4 வெட்டிப்பயலுவ
5 பந்தா காட்டுறவங்க

யாருடைய லவ்வையும் ஈசியா பிடிச்சிறலாம் ஆனா... படிக்கிறவங்கட லவ்வ பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்.. ஏன்டா அவன் தன்ட லவ்வு வெளில தெரியாம இருக்க அறிவுத்தனமா யோசிப்பான்......
இப்ப கூடுதலா போன்ல தானே காதல் ஓடுது.....
போன் வந்த ஆரம்ப காலத்துல தன்ட ஆள்ட பெயர தன்ட பிரண்டுட பெயரில சேவ் பண்ணி வைக்கிறது.
அடுத்தது.. கதைக்க குள்ள ஆயரத்துக்கு ஆயிரத்து ஒருதடவை “டேய்” போடுறது.... “அப்பிடியாடா..“ஏன்டா”.. “எதுக்குடா”... என்டு.. .. ஏன் என்டா.. தான் பொடியனோடதான் கதைக்கிறத மத்தவங்களுக்கு confirm பண்ண வைக்கிறாங்கலாம்டியோவ்........
அது எவ்வளவு காலம் தான்.. குயில்ட கள்ளத்தனம் பிடிபடாம இருக்கும். அவன் அப்பாவாகி தன்ட மகன் இப்பிடித்தான் செய்வான் என்டு  திங் பண்றதுக்குள்ள.. .....
அவன் ட்ரெண்ட மாத்திடுவான்..
பிறகு தங்கட ஆள்ட நம்பர பாடமாக்கி வச்சிருந்தாங்க..... அவங்களுக்கு பள்ளிப்பாடம் எல்லாம் பாடம் வருதோ இல்லையோ..... இதல்லாம் நல்லா பாடம் வரும்.......... அதுவும் பெயிலியராக.....

இப்ப புது ரெண்டா அல்லோ ஜூஸ் பண்றாங்க.....
ஆமாங்க நான் இப்பதான் கண்டு பிடிச்சன்.... தன்ட ஆள்ட நம்பர.. அப்பா, அக்கா, அம்மா ..... என்டு சென்டிமென்டான பெயரில சேவ் பண்றாங்கப்பா.....
நம்மட கம்பஸ் பொடியன் ஒருவன் இதுல என்கிட்ட மாட்டு பட்டான்... அது எப்புடி என்டு சொல்றன் பாருங்க....
அன்டைக்கு அவனின் சில பல நடவடிக்கைகள்.... தாறுமாறக போனது நம்ம கண்ணில் மாட்டு பட.. அவன்ட போன கேட்ட .. பயப்படாம தந்துட்டான்... என்னடா இவன்.... ரொம்ப நல்லவனா இருக்கே என்டு போன் மெசேஜ்கள பார்த்தா......
அப்பாவும் அக்காவும் ஒரே மெசேஜ் அனுப்பி இருக்காங்க.. அது அவன்ட சொந்த matter  என்டு  தலைய நுளைக்க விரும்பாத போதும்..... அப்பா எல்லாம் மெசேஜ் அனுப்புறது... எங்கயோ  லைட்டா இடிக்க அந்த மெசேஜ்ஜ திறந்து பார்த்தா...
அப்பா அவனுக்கு காதல் கவிதைகள் அனுப்புறார் என்டா பாருங்களேன்...
I love the way you look at me,
Your eyes so bright and blue.
I love the way you kiss me,
Your lips so soft and smooth.
என்ன கருமாந்திரம் டா என்டு அங்காள பார்த்தா.. அவன்ட அக்கா.. 
When all the songs are over
and all the words been said
The sun grows dim across the sky
and the world prepares for bed

I oft can take a moment now
to view the sky above
and whisper God a simple prayer
to thank him for your love 
இப்பிடி மெசேஜ் எல்லாம் .... அக்கா ... அப்பா அனுப்புற மெசேஜ்சா என்டு செக் பண்ணினா.. சிங்கம் சிக்கிட்டு.... 
பாவம்..பாலை ஆட்டய போட்ட  பூனைக்குஞ்சு போல தம்பியர் முழிக்கிறேர்... 
பிறகு என்ன ... அவன வச்சு நம்மட பொடியங்கள் வாட்டி வதக்கி.. சம்பல் போட்டுருப்பாங்க.. இதுல நான் இல்ல...நான் நல்லவன்க.........


மட்ட பொடியங்க இருக்காங்க....
செம ஊமைக்குசும்பங்கள்..... கு...கு....கு..... குந்தினா கூடி சத்தம் வராமத்தான் குந்துவாங்க..... சிகரட் அடிச்ச பூனை அடுப்பங்ரையில போய் புகை விட்ட மாதிரி ....தங்கட விஷயம் வெளில போகாம..... ஆனா அவங்க குந்துற இடத்துலதான் நாங்க வைக்கிறம் ஆப்பு........................
ஆமைட தலையக்கூடி வெளில இழுத்து எடுக்கலாம்....ஆனாஎவன் ஊமைக்குசும்பனா இருக்கிறானோ... அவன்ட விஷயம் எலிக்குஞ்சு அமத்தி வச்சுருக்கிற உடுப்பு மாதிரி.... அது உடுப்ப எங்க எங்க ஒளிச்சு வச்சுருக்கும் என்டே தெரியாத மாதிரி அவன் அமத்திட்டு இருப்பான்... அதால...அவன் மேல் இரண்டு வாட்டி கண்வைங்க..... தம்பி எங்கயோ தள்ளாடுறேர் என்டு அர்த்தம்.....


வெளிப்படையா இருக்கிறவன பத்தி நாம கதக்கவே தேவயில்ல... அதான் அவனே வெளிப்படையா இருக்கிறானே... என்டு விட்டுடாதீங்க.... ஊமைக்குசும்மப் எலிக்குஞ்சு அமத்தின உடுப்பு என்டா......இவன்....கங்காருட வயித்துக்குள்ள பூந்து கிடக்கிற.... கங்காருகுஞ்சுலே......  இவன் ரெண்ட மாத்திர கேசு... கவனமாத்தான் டீல் பண்ணணும்...

வெட்டிபய காதல்.......  எப்பவும் வெட்டியாத்தான் இருக்கும்.. ஆனா கெட்டியானது....... சோ.. இத பத்தி நாம  டோன்ட் ஹெயார்..

பந்தா காட்டுறவன்.... பொம்பளங்களுக்கு ரொம்ப பந்தா காட்டுவான்.... நம்மட பொம்பளங்களும் ஈஈஈஈஈஈஈஈஈஈ என்டு இளிச்சுட்டு போகும்.... எவன் பந்தா காட்டுறானோ.. அவங்களத்தான் பொம்பளங்க நம்பும்.. நம்மல மாதிரி நல்ல பயலுவகள எங்க நம்புதுக... பெண்புத்தி பின் புத்திதானே... அவங்கள சொல்லி குறையில்ல... ஆண்டவன சொல்லனும்.... சரி விடுங்க.. அவனாவது சந்தோசமாக வாழட்டும்.......

இன்னொருவங்க இருக்காங்க..... அவிட்டு விட்ட மாடு போல... அங்க இங்க என்டு ரோட்டு ரோட்டா திரிஞ்சு லவ் பண்றாங்களாம்..... KFC  அடில போய் நிப்பாங்க... பஸ் டேன்டில் போய் நிப்பாங்க... ஏன்.... விட்டா வெள்ளவத்த மார்கட்டில போய் காய் கறியும் விப்பாங்க..... இவங்கட கொசுத்ததொல்ல தாங்க முடியலப்பா...... யாரையோ லவ் பண்ணுவாங்க..  அந்த பொட்ட போற இடமெல்லாம் வழமையா பின்னால தான் அலைவாங்க... இப்ப இவங்க புது ரெண்டா கண்டு பிடிச்சிருக்காங்க.....ஒன்டு... பொம்மள பிள்ளைகள் போன அதுக்கு முன்னால போற.... இடைக்கிடையில ஏதோ காலில் தட்டுபட்ட போல திரும்பி அந்த பிள்ளைகள பாக்கிற....... இல்லாட்டி யாரையும் தேடுற மாதிரி..... பண்ணி குப்புற படுத்தா..அத பாத்த எருமை மாடு மல்லாக்க படுக்குமாம்.....
அதேகதையா.... இவங்கள் பாக்கிறாங்கள் என்ட உடனே.. அந்த பொம்பள பிள்ளைகளுக்கு கெப்பர்(எழுப்பம்) ஏறிடும்... பிறகு... காக்கைய பாத்து மயில் என்டு கூப்பிட்ட கணக்கா... தங்கள விட்டா ஆளில் இல்ல என்ட கனக்கா திரிவாங்க...

இன்னொரு பசங்க கூட்டம் இருக்கு....  அவன் லவ் பண்ற பொண்ணு ஒரு ரோட்டால போகும்.... அதுக்கு அடுத்த ரோட்டால போய் ..... அந்த பிள்ளைக்கு முன்னால போய் மடக்குறது...... எப்பிடி எல்லாம் யோசிக்கறாங்கய்யா.....

இன்னும் கண்டுபிடிப்புக்கள் தொடரும்.....

comment

LinkWithin

Related Posts with Thumbnails