Tuesday, March 12, 2013

தமிழ் இனி .............



பச்சிளம் பாலகன் கேட்பதெல்லாம்
இவ்விளம் பாலகன் கேட்கவில்லை...
முத்தமிழ் தெரிந்திட ஆசைப்பட்டேன் - அதில்
முப்பாலும் பருகிட வேட்கை கொண்டேன்

செந்தமிழாய் நின்ற தேன்தமிழ் இன்று - பலர் நாவில்
வெந்தனல் போன்று சுடுவதேன்..
பலர் நாவினில் வெந்திட்ட தமிழ் - இனி
இப்பாரினில் ஓங்கித்துளிர் வந்திட வேண்டும்.
தமிழுக்காய் வாழ முடியாவிட்டால் - இனி
தமிழனாயாவது வாழ்ந்திடப்பார்

கூச்சங்கள் கொண்டு வாழ்வதேன் - தமிழ்
வேசங்கள் போட்டும் வாழ்வதுமேன்.
தேசங்கள் அத்தனை ஆண்ட தமிழ் - இன்று
பேச்சு மூச்சின்றி கிடப்பதுவோ ...

இச்சை கொண்டிட முடியாவிட்டால் - தமிழை
எச்சில் படுத்திடல் வேண்டாமே !!!
கொச்சைப்படுத்தும் நாவு கண்டால் -அதை
நச்சென்று வெட்டிடு துண்டு துண்டாய் !!!

வேற்றுத்திசை மொழிகள் - எங்கள்
பேச்சுத்தமிழினில் புகுந்திடலாமோ !!
மூச்சுக்காற்றினில் கலந்திட்டால் - தமிழ்
இனி உயிர் கொண்டு மெல்லத்துளிரும் அன்றோ !!

comment

LinkWithin

Related Posts with Thumbnails