Saturday, October 16, 2010

மறைக்கவும் , மறுக்கவும் முடியா உண்மைகள்...

நாசாமா போச்சு.. இவன் வர வர தத்துவம் வேற எழுதத்தொடங்கிட்டான் என்டு நீங்க எதிர்பார்த்தா அது தப்பு... ஆனா கிட்டத்தட்ட தத்துவம் மாதிரி.. ஆனா தத்துவம் இல்ல.. ஆனா உண்மைகள்... பலருக்கும் தெரிந்த ஆனா வெளியே சொல்ல ஏலாத யதார்த்தங்கள்.

 சரிடாப்பா.. வதைக்கிற என்டு முடிவு கட்டிட்டா.. இல்லாட்டி உங்கள பாணில சொன்ன மொக்கை போடப்போற என்டு தெரிஞ்சு போச்சு வேணா...........ம் என்டா மட்டும் விடவா போறா.. போட்டுட்டு போ என்டு சொல்ற உங்க Mind Voice ஐ நான் catch  பண்ணிட்டன்..






சரி நான் தொடங்கவா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!




நாங்க சின்னப்பிள்ளையா இருந்து வளந்து . பள்ளிக்கூடம் போய் படிச்சு.. இப்ப கம்பஸ் வரை வந்துட்டம்... இப்பிடியான எங்கட கேவலம் கெட்ட பாதையில் பல நாறின அனுபவங்கள்...(என்னடா பாதையே கேவலம் அதுக்குள்ளேயே நாறனதா .. என்டு பாக்கிறீங்களா ) இல்லாட்டி நாங்க நாற வச்ச அனுபவங்கள்...ஒன்டு இரண்டான டேஸ்டான அனுபவங்கள்.. பல கெட்டது.. அதுல சில எங்களுக்கு சுட்டது என்டு வெரைட்டி வெரைட்டியா எக்ஸ்பீரயன்ஸ் இருக்கும்..  இந்த மொத்த எக்ஸ்பீரயன்ஸ்லயே... அன்டில் (Untill) ஏ/எல் வரை நாங்க பட்டது குறைவாத்தான் இருக்கும் ஏன் என்டா....  We  were UNDER CONTROL அதாவது நாங்க எங்கட அம்மா அப்பா பிள்ளையா இருந்தனாங்க.. அதுக்காக இப்ப என்ன ஆடு மாடுகள்ட பிள்ளையா என்டெல்லாம் என்ன நக்கல் அடிக்கப்படாது.. ஓ.கே.  கம்பசுக்க வந்த பிறகு தான் பேத்த கன்டு குட்டிய அவிட்டு விட்ட கணக்கா அங்க இங்க என்டு என்ன செய்ற என்டு தெரியாம ஓடிதிரிச்சு.. நாங்க அடி வேண்டாத இடமே இல்ல,                              ( இங்கு அடி = எக்ஸ்பீரியன்ஸ்) இப்பதான் நாங்க எங்கட அந்த நாறின பாதைல உண்மைகளை அறிய வெளிக்கிடுறம்..............


இப்ப நான் சொல்லப்போறது யாரையும் புண்படுத்தவோ .. இல்ல யாரையோ குத்திக்காட்டவோ இல்லை என்டு சொன்னா நீங்க நம்மபோறது இல்ல.... ஏன் என்டா அந்த உண்மைகள் பலருக்கு குத்தும்... சிலருக்கு பத்தும்... அதால எவன் எவனுக்கு இல்லாட்டி எவள் எவளுக்கு குத்துதோ அவங்க திருந்த ட்ரை பண்ணுங்க (சொன்னான் தானே தத்துவம் மாதிரி ஆனா தத்துவம் இல்ல என்டு அதாங்க இது...)

முதலாவது என்ன என்டா மறைக்கிறது.. சாப்பாடு சாமான இல்லடாப்பா.... உண்மைகளை... சரி சில விஷயங்கள மறைக்கத்தான் வேண்டும்.. ஆனா அது ரகசியமா இருக்க மட்டும்தான்... ஊருக்கே பப்பரப்பே என்டு வெளிச்ச விஷயங்ள....  இவங்கள் என்னென்டா.. அவங்களுக்கே தெரியும் இது ஊருக்கே தெரியும் என்டு ஆனா ஏதோ பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிச்சா உலகமே இருட்டு என்ட மாதிரி.. இவங்க விஷயத்த அமத்தி வச்சா ஒத்தருக்கும் தெரியா என்டு நினைக்கிறது...

இன்னும் சில பேர் இருக்காங்க ஊருக்ககு நல்லவங்களா இருக்கிறது.. அதான்பா... தாங்க மட்டவங்கள பத்தி எவ்வளவு உண்மையா தெரிஞ்சு வச்சுருக்காங்க இல்ல புரிஞ்சிருக்காங்க என்டு அவங்களுக்கு முக்கியம் இல்ல.. தங்கள பத்தி ஊர் என்ன நினைக்குது என்டுதான் முக்கியம்.. அதுக்கு எங்கட கம்பசுலயே பலர்... சீ... சீ... சிலர் இருக்காங்க... அவங்கட ரோதனை தாங்க முடியாதுப்பா... ஏதாவது ஒன்டு சொன்னா காணும் அதையே வச்சு குடைறது....  " நீங்க என்ன பத்தி என்ன நினைக்கிறீங்க ???? என்ன பத்தி ஏதாவது சொல்லுங்க.... நான் நல்லனா/ளா ,கெட்டவனா/ளா ?? "  அதுக்கு ஏதாவது சொல்லனும் இல்லாட்டி அன்டைய நாள் அம்போ..கூகூகூகூகூகூகூகூ தான்...   சப்பப்பா முடில.!!! ஓ.. ஆனா எனக்கு ஒன்டு மட்டும் என்டு விளங்கல்லப்பா !! முதல்ல தன்னை பத்தியே தெரியாமலே வாழ்ற ஜென்மங்கள என்ன என்டு சொல்றது.... (இது நான் யாரையும் குத்தல என்டா யாராவது நம்புவாங்களா ???)  வேணும் என்டா பாருங்களேன். இத வாசிச்சுட்டு உடனே கேப்பாங்க. இது யாரைபத்தி எழுதினீங்க... யாரை இப்படி சொன்னீங்க என்டு.... அப்பிடி எண்ணம் உங்களுக்கு வந்துச்சு.. இது உங்களுக்குரியதே !!!!!


அடுத்து..... உண்மையா இது ஒரு கேவலம் கெட்ட வேலைங்க....
X , Y  என்டு இரண்டு பேர் என்டு வைங்களேன் X க்கு Y ஐ ஏதோ காரணத்துக்காக பிடிக்கல என்டுங்களேன்.... பிடிக்காட்டி விடுறதானே..... .. அவன்(Y) ஏதோ வஞ்சம் வச்சு பழிவாங்கிற மாதிரியே அவங்கட நடவடிக்கைக்ள இருக்கும்...  உதாரணத்துக்க வருவோமே... (இது வெறும் உதாரணம் தாங்க.. உண்மையா நடக்கல :P ) சிலருக்கு(Y) லெக்சர் நேரத்தோடயே முடியும்... ஆனா..  அவன் வீட்ட போக மாட்டான் X க்கு அலுப்படிக்க என்டே காத்திருப்பாங்கள்.. அதுள என்ன ஒரு காமடி என்டா X க்கு பெரிய சந்தோசம் தன்னையும் ஒருவன் பாக்கிறன் என்டு.... தூ இதெல்லாம் ஒரு பிழைப்பு (இந்த தூ Y க்குங்க . X கடுப்பாக வேண்டாம்)..... கடுப்பாக்கிறார் மை லார்ட் (இது எனக்கு




அடுத்ததுதாங்க வாழ்கையில மெயின் மெட்டர்.... லவ்... இத வாசிச்ச பிறது என்னை யாரும் ஒரு கேள்வியும் கேக்கபடாது.... நாங்க என்ன யாரையும் லவ் பண்ண வேணாம் என்டா சொல்றம்.. லவ் பண்றது சந்தோசம் தானே.. லவ் பண்றத வெளில சொன்ன ஒரு பிரச்சனையும் இல்லங்க... என்னென்டு கேக்குறீங்களா...
1- அவன்ட ஆளை இல்லாட்டி அவள்ட ஆள(அவள்ட ஆள் என்டது கொஞ்சம் ஓவர் தான் பருவால அஜட்ஸ் பண்ணுங்க) யாரும் பாக்க (லவ்) மாட்டாங்க.
2-எனி டைம் எனி கெட்ப் பண்ணுவாங்க Eg :- யாரும் அடிக்க வந்தா .. மாறி அடிக்காட்டியும் சேந்து அடிவாங்கவோ.. இல்லாட்டி கூட்டிட்டு ஓடி வரவோ உதவலாம் (Not sure.. may be)....
3- Etc....




சிலர்... அவன் லவ் பண்றானோ இல்லயோ... மட்டவன லவ் பண்ண வச்சு அவன பாழும் குழில தள்ளினாலும் பருவால....  புதை குழில தள்ளுறதுக்கு என்டே சில ஜென்மம் கம்பசுக்கு வந்திருக்கு.. மட்டவனுக் சும்மா .. சும்மா உசுப்பேத்தற... சும்மா கிளப்பி விட்டு வேடிக்க பாக்கிறதுல இருக்கிற சுகம் இருக்கே.... அது பரம சுகமுங்க (ஐயையோ தெரியாம வாயை விட்டுடனே) ..

அடுத்தது படிப்பு.. இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்டு பாக்கிறீங்களா.... படிக்கிறவன் மட்டுதான் படிப்ப பத்தி எழுதனும் இல்ல படிப்பால பாதிக்கப்பட்டவனும் எழுதலாம் என்டு காட்டத்தான் .. வான்டறா நான் இத எழுதுறன்.... ஒரு சில கேசுகள் கிடக்கு .... அவங்கள் படிப்பாங்கள்... ஆனா எக்ஸாம் எழுதிட்டு வந்து... போடா மச்சான்..... இந்த முறை பாடம் கைலதான்.. C வரும் என்டதே சந்தேகம் தான். என்டு வாங்கள்.. ஆனா எடுக்கிறது A or A+  .. சரி விடு கழுதை எடுத்துட்டு அவன்ட பாட்டுல போறதுதானே விடமாட்டானே.. .. அங்கதாங்க .. அவன் மட்டவன சீண்டி பாப்பான்... மச்சான் எப்புடி வந்ததென்டே தெரியாடா.. லெக்சர் மாறி போட்டுடான் மச்சி.....   இல்லாட்டி Moderate பண்ணிருக்கான் மச்சி.... ... இதுல நானே பாதிக்கப்பட்டேன் .. நேரடியாக பாதிக்கப்பட்டேன்... இவங்கள பத்தி யாரும் முதல்லே தெரிஞ்சா மட்டவங்கள அலர்ட் ஆக்குங்க... நேரத்தோடயே சுதாகரிச்சு தப்பலாம்.....

முடிவா நான் சொல்ல வாறது என்னனென்... இதுல நீங்க எந்த எந்த இடத்துல இருக்கீங்களோ .... திருந்துங்க என்டா .. .நீங்க திருந்த போறது இல்ல..... ஆகவே....  ட்ரையாவது பண்ணுங்க.... திருந்திறதுக்கு....

எவனாவது இத வாசிச்சுட்டு வந்து ஏதாவது கேள்வி கேளுக்க...  அவன பத்தியும்(கேவலமா !!!) எழுதிப்போடுவன்.... ஜாக்கிரதை...

இன்டைக்கு இந்த அறுவை போதும் நான் நெக்ஸ்ட் மீட்ட பண்ணுறன்..

comment

LinkWithin

Related Posts with Thumbnails